Saturday, May 10, 2014

what the fucking fate i have...

hi

this time also proved that i m the loser..
i always the loser..
i m just a broken man..or my fate is great story of the loser..

I DONNA WHY I AM STILL ALIVE

please fate just kill me .. don't make me to do a suicide .. i m sure i'll loss that too




Saturday, May 3, 2014

Hi there

Hi,

its  a long time.. i m coming back and i bought new mobile in last week with my salary That moto g..


14 k


for girls

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.

1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.

2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.

3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.

5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.

6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .

7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.

9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.

10) உங்களை வேலைக்காரியாய்,சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.

11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.

Sunday, February 23, 2014

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

8. உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

Saturday, November 2, 2013

தமிழனாய் இருப்பதற்காக வெட்கப்படுகின்றேன் ..


தமிழனாய் இருப்பதற்காக வெட்கப்படுகின்றேன் ..!

எனது தங்கைகளை, எனது அக்காக்களை ஏதோ ஒரு சிங்கள நாய் கூட்டங்கள் இழுத்துச் சென்று கடித்துக் குதறி கொன்று குவிக்கின்றனர்.

அதுவும் எமது நாட்டில், எமது மண்ணில் ஒரு அன்னிய நாய் வந்து எமது பெண்களை இவ்வாறு கொன்று குவித்த போது, மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாம் இனி தமிழன் என்றும் தமிழ் என்றும் கூறுவதானால் என்ன பயன்...?

இனி என்ன வரலாறு வேண்டி இருக்கின்றது எமக்கு. தமிழன் என்றால் யார் என்றால் இனி எதிர்காலம் இப்படித்தான் கூறும்.

சொந்த நாட்டில், சொந்த மண்ணில் சொந்த இன பெண்களின் கற்புகள் அந்நியனால் சூறையாடப்படும் போது அமைதியாக வேடிக்கை பார்த்த கூட்டம் தான் தமிழர்.

12கோடி தமிழர் உலகமெங்கும் இருந்தும் கேவலம் வெறும் 1 கோடி கூட இல்லாத சிங்களவன் முன் மண்டியிட்ட கூட்டம் தான் தமிழர்.

நாம் கோழைகள் தானே. இனி என்ன நடந்தாலும், என்ன வந்தாலும் அன்று போன எம் தங்கைகளின் உயிர்கள் இனி வருமா?

அன்று அங்கே இராணுவத்தினரிடம் சிக்கிய எம் தங்கைகளை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். தமிழன் என்று சொல்ல வெட்கபடுவீர்கள்.

இத்தனைக்கும் இந்த சம்பவம் நடந்த மே 17,18 நாட்களில் அதே முள்ளிவாய்க்காலில் தான் நானும் இருந்தேன் என்று சொல்லவே கேவலமாக இருக்கு.

இனி நாம் எத்தனை பெரிய வெற்றிகள் பெற்றாலும், எத்தனை இடம்களை கைப்பற்றினாலும், சொந்த பெண்களை கூட காப்பாற்ற முடியாத கோழைகள் தமிழர் என்ற கறை எம்மை விட்டு போகாது.

எமது தங்கைகளிடம் மன்னிப்பு கேட்க கூட தகுதியற்ற ஈன பிறவிகளில் ஒருவன்.

- ஈழ மைந்தன் -
Like ·  · 

Friday, October 25, 2013

முதல் இந்திய விடுதலைப் போர் எது?


முதல் இந்திய விடுதலைப் போர் எது?

1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல்லாதிக்க எதிர்ப்புப் போரே "முதல் இந்திய விடுதலைப் போர்" என்று வடநாட்டரால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் மதங்களின் சாயலோடு வெளிப்பட்ட போர்.

ஆனால் இந்தப் போருக்கு 57 ஆண்டுகளுக்கு முன்னர் சாதி, மத பேதங்களைக் கடந்து, உழைக்கும் மக்களை பெரும் திரளாக அணிதிரட்டி வெள்ளையர் படைக்கு எதிராக போரிட்டவர்கள் மருது பாண்டியர்கள் ஆவார். தூந்தாஜி வாக் (கன்னடம்), கேரளவர்மா (மலபார்), தீரன்சின்னமலை (கோவை), கோபால நாயக்கர் (திண்டுக்கல்), கிருஷ்ணப்பா நாயக் (மைசூர்), ஊமைத்துரை (நெல்லை), ஆகியோரோடு இணைந்து "ஜம்புத்தீவு -தென்பகுதி- கூட்டமைப்பை" உருவாக்கி வெள்ளையருக்கு அதிக உயிர் சேதத்தை உருவாக்கிய மன்னர்கள் மருதிருவர் என்று ஜேம்ஸ் வெல்ஷ் என்பவன் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளான். 

சின்ன மருது வெளியிட்ட "ஜம்புத்தீவு பிரகடன" அறிக்கைக்கு இணையாக வடநாட்டில் எந்த மன்னனும் வெளியிட்டதில்லை. அதில், "ஐரோப்பிய ஈனர்களுக்கு தொண்டு செய்பவனுக்கு மோட்சம் கிடையாது. அவன் வைத்திருக்கும் மீசை எனது அடிமயிருக்குச் சமம். அவன் பெற்ற பிள்ளைகள் தன் மனைவியை ஐரோப்பிய ஈனப் பிறவிக்கு கூட்டிக் கொடுத்துப் பெற்ற பிள்ளைகள். ஐரோப்பிய குருதி ஒடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!" என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. "ஜம்புத்தீவு புரட்சிப் பிரகடன அறிக்கை" திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கக் கோயில் வாசற்கதவிலும் ஒட்டப்பட்டது. இதைப் படித்து ஆத்திரமுற்ற வெள்ளையர் அரசு சின்னமருது உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் 500 பேரை கைது செய்து திருப்பத்தூரில் தூக்கிலேற்றியது. 1800- களில் இதுபோன்றதொரு வரலாற்றுப் பதிவு வடநாட்டில் கிடையவே கிடையாது.

வீரஞ்செறிந்த மருதிருவர் நடத்திய தமிழர் போராட்டத்தை தில்லியரசு திட்டமிட்டு மூடி மறைத்து விட்டது. இந்திய தேசியக்கட்சித் தலைமைகள் வடநாட்டார் கையில் இருப்பதால் 1857- ஆம் ஆண்டுப் புரட்சியை வெட்கமின்றி "முதல்ப் புரட்சி" யென்று முன்மொழிகின்றன. திராவிடக்கட்சிகளும், சாதிய இயக்கங்களும் இந்திய தேசியம் வாந்தியெடுத்ததையே இப்போதும் வாங்கி விழுங்குகின்றன. 1806ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியைக் கூட "தென்னிந்திய புரட்சி" என்று சொல்லும் பாரதமாதா பஜனைகள் 1857ஆம் ஆண்டுப் புரட்சியை "வட இந்தியப் புரட்சி" என்று சொல்வது தானே பொருத்தமானது. உலகின் முதன் மொழி தமிழ். உலகின் முதல் மாந்தன் தமிழன். உலகின் முதல் கண்டம் தெற்கே உருவான குமரிக்கண்டம் என்பார் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர். அவர் வழியில் திருத்தப் பட்ட வரலாற்றை தமிழர்களே! திருத்தியெழுதுவோம்! ||மருதுபாண்டியர் தூக்கிலிட்ட நாள்|| *24.10.1801

நன்றி : கதிர் நிலவன்