Wednesday, January 23, 2013

GOOD posts in TAMIL

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்!

இன்று - ஜன.23: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்!
நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1938-ம் வருடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பதவி ஏற்றபோது, அவரது வயது 41. வயதானவர்கள் மட்டுமே வகித்த பதவிக்கு இளவயதில் நேதாஜி தேர்வு செய்யப்பட்டதும், தொண்டர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ‘பேச்சுவார்த்தை இனி செல்லுபடி ஆகாது. மக்களை ஒன்று சேர்த்துப் போராடுவோம்; வெள்ளையரை விரட்டுவோம். சுதந்திரம் மட்டுமே நம் ஒரே குறிக்கோள்!' என தீவிரமாக சுபாஷ் இறங்கினார். ஆனால், அவரது அதிரடி நடவடிக்கைக்கு ஒத்துழைக்க, கட்சியின் மற்ற தலைவர்கள் தயாராக இல்லை.

ஏதேதோ கனவுகளுடன் பதவிக்கு வந்த நேதாஜி, தன் கைகள் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்தார். இந்தப் பதவி பரிசு அல்ல... விலங்கு எனப் புரிந்து, பதவியை ராஜினாமா செய்தார். ‘‘பதவியில் இருந்து சாதிப்பதுதான் புத்திசாலித்தனம். இனி மக்களை எப்படித் திரட்டமுடியும்? நீங்கள் தோற்று விட்டீர்கள்’’ என நெருங்கியவர்களே குறைப்பட்டுக்கொண்டார்கள். ‘‘இல்லை. காங்கிரஸ் தலைவர் பதவி இல்லாமலே என்னால் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தர முடியும். இது எனக்கு ஒரு பின்னடைவு மட்டுமே; தோல்வி அல்ல! நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை!’’ என்றார் நேதாஜி. ஆம், சுவாமி விவேகானந்தரின் இந்த வேதவாக்குதான், நேதாஜியின் தாரக மந்திரம்.

1897&ம் வருடம் கட்டாக் நகரில் பிறந்தார் சுபாஷ் சந்திர போஸ். மெட்ரிக் குலேஷன் தேர்வில், மாநிலத்திலேயே இரண்டாவது மாணவனாகத் தேறினார். பின், தந்தையின் ஆசைக்காக லண்டனில் ஐ.சி.எஸ். தேர்வு எழுதி பாஸானார். ஆங்கிலேயரிடம் அடிமை வேலை பார்க்க விரும்பாமல், ஐ.சி.எஸ். பதவியைத் தூக்கி எறிந்த முதல் இந்தியர் நேதாஜிதான். காங்கிரஸின் மிதவாதக் கொள்கைகள் பிடிக்காமல், தீவிர கருத்து உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து ‘ஸ்வராஜ் கட்சி’ தொடங்கியபோது, அதை வளர்ப்பதற்காக ‘ஃபார்வர்ட்’ என்ற நாளிதழை தொடங்கி னார் நேதாஜி. இந்தக் கட்சி கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெறவே, 25 வயதில் நகரசபை கமிஷனர் ஆனார் சுபாஷ். மக்களிடையே சுபாஷ் செல்வாக்கு உயர்வதை விரும்பாத ஆங்கிலேய அரசு, காரணமின்றி அவரை அடிக்கடி சிறையில் தள்ளியது. அவரது உடல்நிலை மிக மோசமாகவே, இந்தியாவில் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவரை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியது. 1937&ம் வருடம் தடை நீங்கிய பின்னரே சுபாஷ் இந்தியா வந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆனார். மீண்டும் சிறைப்பட்டபோதுதான், இரண்டாம் உலகப்போரை இந்திய விடுதலைக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற உத்தேசத்தில், சிறையில் இருந்து தப்பி, ராணுவப் போருக்குத் தயாரானார்.

1944&ம் வருடம். இந்திய எல்லையில் சுமார் 2 லட்சம் ஜப்பானியரும், இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த 6,000 இந்தியர்களும் ஆங்கிலேயருடன் போரிட்டார்கள். எதிர்பாராத பெரும் மழையால், சேறும் சகதியுமாக இருந்தது போர்க்களம். ஆங்கிலேயர்கள் நவீன கருவிகளுடன் போரிட்டுக்கொண்டு இருக்க வயர்லெஸ், ஜீப், மோட்டார் சைக்கிள், டெலஸ்கோப் போன்ற எந்த சாதனங்களும் இல்லாமல், உணவும், மருத்துவ வசதிகளும் இல்லாமல் இந்தியப் படை போரிட்டது. அமெரிக்க விமானப் படை ஜப்பானியர்களை மொத்தமாகக் கொன்று போட்டது. உடனே, ஜப்பான் பிரதமர் போரை நிறுத்திவிட்டு, மிச்சமுள்ள தன் வீரர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டார்.

எலும்பும் தோலுமாகத் திரும்பிய இந்திய வீரர்களைக் கண்டு ரத்தக்கண்ணீர் வடித்தார் நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தைத் தொடங்கிய பியூஜிவாரா, ‘‘நாம் தோற்று விட்டோம். இந்தத் தோல்வியில் இருந்து நம்மால் மீளவே முடியாது’’ என்று கதறினார். அப்போதும் உறுதியுடன், ‘‘நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை!’’ என்றார் நேதாஜி. நடந்தவற்றைக் கண்டு மனம் தளராமல், ரஷ்யாவின் ஆதரவைப் பெற விமானம் ஏறினார்.

மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டாலும், அதனை ஒரு தோல்வியாக எடுத்துக்கொள்ளாமல், நம்பிக்கை யோடு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கியதால்தான், ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இன்றளவும் இருக்கிறார் நேதாஜி! 

- எஸ்.கே.முருகன் (மந்திரச் சொல் - ஆனந்த விகடன் 07-05-06)

// இன்று - ஜன.23. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள். //
'தமிழர்களின் பெருமையை உண்மையாகவே உணர்ந்த தலைவர்கள் உண்டா?''

''நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர்களில் பாதிப் பேர் தமிழர்கள். மேஜர் ஜெனரல் அழகப்பா, கர்னல் சோமசுந்தரம், நாகரத்தினம், எஸ்.ஏ.ஐயர், திவி போன்றோர் ஐ.என்.ஏ. ராணுவத்தில் பிரிகேடியர் அந்தஸ்தில் இருந்தவர்கள். நேதாஜியின் சமையல்காரர் காளி என்பவர் தமிழர்தான். இதனை எல்லாம் உணர்ந்து 'அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமானால், நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன்’ என்றார் நேதாஜி!''

- சாய்மீரா, சென்னை-91.

(ஆனந்த விகடன் "நானே கேள்வி நானே பதில்''. மார்ச்
21, 2012 இதழில் இருந்து..)

இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 117 ஆவது பிறந்த நாள் !

Great Tamil girl

சி.ஏ தேர்வில் முதலிடம் பிடித்த பிரேமாவுக்கு பாராட்டு மற்றும் உதவிகள் குவிகிறது!

சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த மும்பைத் தமிழரான ஆட்டோ டிரைவர் ஜெயக்குமாரின் மகள் பிரேமாவுக்கு கருணாநிதி ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கியிருக்கிறார். எண்ணூர் துறைமுகம் சார்பில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.
சி.ஏ தேர்வில் முதலிடம் பிடித்த பிரேமாவுக்கு பாராட்டு மற்றும் உதவிகள் குவிகிறது!

சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த மும்பைத் தமிழரான ஆட்டோ டிரைவர் ஜெயக்குமாரின் மகள் பிரேமாவுக்கு கருணாநிதி ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கியிருக்கிறார். எண்ணூர் துறைமுகம் சார்பில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.

HATS OFF SIR!!.. :)

hey said I play for myself
They said I play for my career
They said that I am selfish

But what they never realized is that I play even when my body doesn't support me.. What they never realized is that I play even if I am suffering from bad injuries.. What they never realized that for me, my Nation is the first priority nd will always be.. What they never realized that I kept the wickets for 50 overs with a sore thumb.. What they never realized is that I kept for 50 overs against Pakistan with a sore back... What they never realized is that I can't miss any game for India as I love my Nation to that extent...

But we fans realized it MSD, nd we all are with you, to support you, to love you... ♥

Nd today you have achieved the milestone of being the 2nd most successful ODI skipper of India..

Well just,

HATS OFF SIR!!.. :)

#ProudMSDian!.. :)

♥♥♥
They said I play for myself
They said I play for my career
They said that I am selfish

But what they never realized is that I play even when my body doesn't support me.. What they never realized is that I play even if I am suffering from bad injuries.. What they never realized that for me, my Nation is the first priority nd will always be.. What they never realized that I kept the wickets for 50 overs with a sore thumb.. What they never realized is that I kept for 50 overs against Pakistan with a sore back... What they never realized is that I can't miss any game for India as I love my Nation to that extent... 

But we fans realized it MSD, nd we all are with you, to support you, to love you... <3

Nd today you have achieved the milestone of being the 2nd most successful ODI skipper of India..

Well just,

HATS OFF SIR!!.. :)

#ProudMSDian!.. :)

<3<3<3

மதுவும் மயக்கமும்

மதுவும் மயக்கமும்
**********************
சிலி நாட்டு கிராமப்புறங்கள் வழியாகப் பயணம் தொடர்ந்தது. ‘தரிசாகக் கிடந்த எங்கள் நாட்டின் தென்பகுதியைப் போலன்றி, நிலங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துண்டு நிலத்திலும் விவசாயம் செய்யப்பட்டிருந்தது. நட்புணர்வு மிகுந்த சிலி மக்கள் நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் எங்களை வரவேற்றார்கள்.’ சிலியின் விருந்தோம்பல் பண்பு எர்னஸ்டோவை வெகுவாகக் கவர்ந்தது.
கெண்டைக்கால் வரை நீளும் கால்சட்டை ஒன்றை ஒருவர் எர்னஸ்டோவுக்கு அளித்தார். இன்னொரு வீட்டில் நல்ல இருப்பிடம் கிடைத்தது. உறங்குவதற்கு நல்ல போர்வையும் உண்பதற்கு நல்ல உணவும் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அது பாப்லோ நெரூதாவின் நாடு. எல் ஆஸ்ட்ரால் என்னும் பத்திரிகைக்கு எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் பேட்டியளித்தனர். அர்ஜென்டினா செய்தித்தாள்கள் போலில்லாமல் சிலியின் தாள்கள் ஏராளமான பக்கங்களைக் கொண்டிருந்தன. இரண்டாவது பக்கத்தில் இப்படியொரு குறிப்பு இடம்பெற்றிருந்தது. ‘இரண்டு அர்ஜென்டைன தொழுநோய் மருத்துவ வல்லுநர்கள் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பயணம். அவர்கள் இப்பொழுது டெமுகோவில் இருக்கிறார்கள். ராபா நூயிக்குப் போக விரும்புகிறார்கள்.’ எர்னஸ்டோ எந்த அளவுக்குத் தன்னைப் பற்றி சவடால் அடித்துக்கொண்டிருந்தால் இப்படியொரு செய்தியும் ‘வல்லுநர்’ என்னும் பட்டமும் கிடைத்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கலாம்!
அவர்களுடைய மோட்டார் சைக்கிளுக்கும்கூட சிலியில் நல்ல மரியாதை கிடைத்தது. வழக்கம் போல் டயர் பஞ்சர் ஆனபோது, அறிமுகமற்றவர்கள்கூட சிரித்த முகத்துடன் உதவிக்கு வந்தனர். எல்லாம் செய்தித்தாள் செய்த மாயம்! ஒரு மருத்துவ வல்லுநருக்கு உதவி செய்யும் பொன்னான வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுமா என்ன? தயவு செய்து எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று வருந்தி அழைத்து இறைச்சியும் ஒயினும் அளித்து மகிழ்ந்தார்கள்.
இப்படித்தான் ஒருமுறை பிரச்னையாகிவிட்டது. மது அருந்துவதற்காகச் சில நண்பர்கள் எர்னஸ்டோவையும் ஆல்பர்ட்டோவையும் வரவேற்றபோது இருவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். சிலி நாட்டு ஒயின் எர்னஸ்டோவை மிகவும் கவர்ந்திருந்தது. கணக்கு வழக்கில்லாமல் ஒட்டகம் போல் நிறைய புட்டிகளை அவர் காலி செய்தார். முடித்த கையோடு ஒரு கிராம நடன நிகழ்ச்சிக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது.
அதற்குப் பிறகு நடந்ததை எர்னஸ்டோவே பதிவு செய்கிறார். ‘அது ஒரு இனிமையான மாலைப்பொழுது. எங்கள் வயிற்றிலும் மனதிலும் ஒயினே நிறைந்திருந்தது. பணிமனையில் இருந்த, நன்றாகப் பழகிய மெக்கானிக் மிகுந்த குடிபோதையில் இருந்ததால் தன்னுடைய மனைவியுடன் நடனமாடும்படி என்னைக் கேட்டுக்கொண்டான். அவனுடைய மனைவி உற்சாகமான மனநிலையிலும் எதற்கும் தயாராகவும் இருந்தாள்.’
மது சாமானியர்களை மட்டுமல்ல வல்லுநர்களையும்கூட மாற்றிவிடுகிறது, தன்னிலை மறக்கச் செய்துவிடுகிறது. ‘மதுவை நிறைய குடித்திருந்த நான் அவள் கையைப் பற்றி வெளியே இழுத்துச் சென்றேன். எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அவள் என் பின்னால் வந்தாள். ஆனால் தன் கணவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து தன் மனதை மாற்றிக்கொண்டாள்.’
எர்னஸ்டோவால் தன் நிலையை மாற்றிக்கொள்ளமுடியவில்லை. ‘எதையும் புரிந்துகொள்ளும் மனநிலையில் நான் இல்லை. நடன நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் சிறு சச்சரவு ஏற்பட்டது. எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்க, நான் அவளை ஒரு கதவை நோக்கி இழுத்தேன். அவள் என்னை உதைக்க முயன்றாள். நான் அவளை இழுக்கவே, அவள் நிலை குலைந்து கீழே விழுந்தாள்.’
அதற்குப் பிறகு நடன அரங்கில் இருந்தவர்கள் மருத்துவர்களைத் துரத்தத் தொடங்கினார்கள். தப்பினால் போதும் என்று எர்னஸ்டோவும் ஆல்பர்ட்டோவும் கிராமத்தை நோக்கி ஓடினார்கள். அதிகாலையில் நினைவு திரும்பியபோது எர்னஸ்டோ தனது முந்தைய இரவு சம்பவத்தைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?
ஆனால் அந்தப் பத்திரிகை செய்திக்கு இன்னமும் பலன் இருந்தது என்பதை எர்னஸ்டோ மறுநாள் தெரிந்துகொண்டார். ஒரு புதிய விபத்துக்குப் பிறகு (இந்த முறை ஒரு பசுமாட்டின் கால் மீது வண்டியை சறுக்கி விழுந்தது) சில ஜெர்மானியர்களின் வரவேற்பு அவர்களுக்குக் கிடைத்தது.
வண்டி இன்னமும் சரியாகவில்லை. மேட்டின்மீது ஏறும் ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு பாகம் விலகி விழுந்தது. அல்லது வெறுமனே மூச்சு வாங்கியபடி நின்றது. அல்லது உருண்டு விழுந்தது. அமெரிக்கக் கண்டங்களிலேயே உயரமானது என்று சிலியர்களால் அழைக்கப்படும் மாலேகோ என்னும் இடத்தை நோக்கி ஏறத் தொடங்கியபோது, வண்டி மீண்டும் செயலிழந்தது. ஏதாவதொரு வண்டியில் மோட்டார் சைக்கிளையும் ஏற்றிச் செல்லவேண்டும் என்பதால் ஒரு நாள் முழுவதும் சாலையிலேயே காத்துக்கிடந்தார்கள். பிறகே வண்டி கிடைத்தது.
குல்லிபுல்லி என்ற ஊரில் தங்கினார்கள். ‘அந்தச் சாலையில் பல செங்குத்தான மேடுகள் இருந்தன. முதலாவது மேட்டில் ஏறத்தொடங்கியதும், லா பாடெரோஸோ உயிரை விட்டுவிட்டது. ஒரு லாரியில் ஏறி லாஸ் ஏஞ்சலஸ் என்னும் நகரை அடைந்தோம். அங்கே மோட்டார் சைக்கிளை ஒரு தீயணைப்புப் படை நிலையத்தில் விட்டுவிட்டு, சிலி ராணுவ லெஃப்டினென்ட் ஒருவரின் வீட்டில் தங்கினோம்… மோட்டார் சைக்கிளில் நாங்கள் சவாரி செய்த கடைசி நாள் அதுதான். மோட்டார் சைக்கிள் இல்லாமல் பயணம் செய்யும் அடுத்த கட்டம் இதைவிடக் கடினமாக இருக்கும் என்று தோன்றியது.’
அந்த அதிகாரி ஒருமுறை அர்ஜென்டினா வந்திருந்தபோது, அவருக்கு அங்கு சிறப்பான வரவற்பு கிடைத்தால், தன்னை உபசரித்த நாட்டில் இருந்து வந்திருந்த இரு மருத்துவர்களைத் தக்கமுறையில் பதில் உபசாரம் செய்யவேண்டும் என்று விரும்பினார். எர்னஸ்டோ அவரிடம் விரிவாக உரையாடினார். தீயணைப்புத் தொழில் குறித்து சில அடிப்படைகளையும் தெரிந்துகொண்டார். தனது குறிப்பேட்டில் பதிவும் செய்துவைத்தார்.
‘எனக்குத் தெரிந்த வரையில், சிலியில் தீயணைப்புப் பணியை பொதுச் சேவையாகத்தான் செய்து வந்தார்கள். இது சிறந்த சேவையாகும். இப்படிப்பட்ட தீயணைப்புப் படைகள் செயல்படும் ஊர்களிலோ அல்லது வட்டாரங்களிலோ, மிகவும் திறமை வாய்ந்த மனிதர்களும்கூட அப்படைக்குத் தலைமை தாங்குவதைப் பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறார்கள். தீயணைப்புப் படைகளுக்கு வேலையே இருக்காது என்று நினைத்து விடாதீர்கள். தெற்கில் தீ விபத்துகள் ஏராளமாக ஏற்படுவதுண்டு. பெரும்பாலான கட்டடங்கள் மரத்தால் கட்டப்பட்டவை என்பதாலோ, மக்கள் மிகவும் ஏழைகளாகவும் சிறந்த கல்வியறிவைப் பெறாதவர்களாகவும் இருப்பதாலோ, வேறு காரணங்களாலோ, அல்லது இவை அனைத்தும் ஒன்று சேர்ந்ததாலோ, தீ விபத்துகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமாக இருந்தன. தீயணைப்புப் படை நிலையத்தில் நாங்கள் தங்கியிருந்த மூன்று நாட்களில் இரண்டு பெரிய தீவிபத்துகளும், ஒரு சிறிய விபத்தும் ஏற்பட்டன.’
அதிகாரியின் வீட்டில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் தீயணைப்புப் படை நிலையத்துக்குச் சென்று பார்வையிடவேண்டும் என்று எர்னஸ்டோ விரும்பினார். எப்படி தீயணைப்பு வீரர்கள் செயல்படுகிறார்கள், தீயைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை நேரில் காண அவர் விரும்பினார். ஆனால் வழக்கம் போல், பிணங்களைப் போல் அன்றிரவைத் தூங்கி கழித்ததால், அபாயச் சங்கு ஒலிப்பதை அவரால் கேட்கமுடியவில்லை. பணியில் இருந்த ஊழியர்களும் இவர்கள் உறங்குவதை மறந்துவிட்டு, வண்டியுடன் விரைந்துவிட்டனர்.
‘நாங்களோ காலையில் நீண்டநேரம் வரையில் தூங்கிக்கொண்டிருந்தோம். அதற்குப் பிறகுதான், நடந்தது என்னவென்றே எங்களுக்குத் தெரிந்தது. அடுத்த தீ விபத்தின்போது கண்டிப்பாக எங்களை அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள்.’

வாழ்த்துக்கள்!!

வாழ்த்துக்கள்!!
ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...

மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை...

இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? ரூசோ அப்படித்தான் வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம். ‘‘இனி என்ன செய்யப்போறே?’’ - கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ். ‘‘விவசாயம் பாக்கப்போறேன்...’’ என்றார் ரூசோ! ‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான வாழ்க்கை... கை நிறைய பணம்... இதெல்லாம் ஓகேதான். ஆனா, நம்மை நிரூபிக்கிற அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே. அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன்!’’ - சிரிக்கிறார் ரூசோ.

சிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரூசோ. ‘மரைன் டெக்னாலஜி’ படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்தவர், இயற்கை விவசாயம் செய்வதற்காக வேலையை விட்டுவிட்டு வந்து நின்றார். இன்று சென்னையில் திருவான்மியூர், பெசன்ட் நகர், நீலாங்கரை ஆகிய இடங்களில் ‘தி நேச்சுரல் ஸ்டோர்’ என்ற இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை மையத்தை நடத்துகிறார். மாதம் ரூ.15 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடக்கும் இவரது கடைகளில் 30க்கும் அதிகமானோர் வேலை செய்கிறார்கள்.

‘‘அப்பாவுக்கு என்னை எஞ்சினியர் ஆக்கிப் பாக்கணும்னு ஆசை. என் கனவு வேற... வித்தியாசமா ஏதாவது பிசினஸ் பண்ணணும். கடைசியில அப்பாதான் ஜெயிச்சார். படிப்பு முடிச்சவுடனே ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வில ஜூனியர் எஞ்சினியரா வேலை கிடைச்சுச்சு. 40 ஆயிரம் ரூபா சம்பளம். பாம்பே பறந்துட்டேன். கப்பல்ல ஜெனரேட்டரை இயக்குறது, எஞ்சின் மெயின்டனன்ஸ், பாய்லர், பம்புகளை பராமரிக்கிறது... இதுதான் வேலை. கடலாறு மாதம், நாடாறு மாதம்!’’ - மெல்லிய புன்னகை படர பேசுகிறார் ரூசோ.

இவருக்கு 2 சகோதரிகள். மூத்தவர் ராஜரீஹா, எம்.பி.ஏ படித்தவர். மா, பலா, நெல்லி என 100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறார். இளையவர் ஜோஸ்பினுக்கு தேனீ வளர்ப்புதான் தொழில். அப்பா ஓய்வுபெற்ற பிறகு, மூத்த அக்காவின் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார்.

“வேலைக்குச் சேர்ந்து ரெண்டாவது வருஷம் சீனியர் எஞ்சினியரா ஆகிட்டேன். 1 லட்சம் ரூபா சம்பளம். எல்லா வசதிகளும் இருந்தும் மனசு மட்டும் வேலையில ஒட்டலே. எந்த சவாலும் இல்லாத வேலை. தினமும் அதே கடல்... அதே கப்பல்... அதே எஞ்சின்... வெறுப்பாயிடுச்சு. ‘இதில என்ன சாதிக்கப் போறேன்’னு மனசு கேட்குது. இன்னும் மூணு வருஷத்தில தலைமைப் பொறியாளர் ஆகலாம். மாசம் 5 லட்சம் ரூபா சம்பளம் கிடைக்கும். ஆனா, இதே கப்பல்தான்... இதே கடல் தான்... இதே எஞ்சின்தான்... கற்பனை பண்ணவே கஷ்டமா இருந்துச்சு...

ஒருமுறை முத்துப்பட்டிக்கு வந்திருந்தப்போ இயற்கை விவசாயிகள் கூட்டத்துக்கு அக்காகூட போயிருந்தேன். கப்பல் வேலையை விட்டுட்டு விவசாயத்தில இறங்கணும்னு முடிவெடுத்தது அங்கேதான். இன்னைக்கு சந்தைக்கு வர்ற எல்லா உணவுப்பொருளும் ரசாயனத்துல குளிச்சுத்தான் வருது. நிலமும் ரசாயனத்துக்குப் பழகிருச்சு. நிலத்தை மீட்டு இயற்கை விவசாயம் செய்றது சாதாரணமில்லை. ஆனா, அப்படி விளைவிக்கிற பொருட்களுக்கு எங்க பகுதியில மரியாதை கிடைக்கலே. பளபளப்பும் கலரும்தான் மக்களுக்கு பெரிசா தெரியுது. அந்தக் கூட்டத்தில விவசாயிகள் இந்த விஷயங்களை ஆதங்கமா பேசினாங்க. அப்போதான் எனக்குள்ள ஒரு பொறி கிளம்புச்சு. நாம ஏன் இந்தப் பொருட்களை மார்க்கெட் பண்ணக்கூடாது?
செயல்ல இறங்கிட்டேன். முதல்ல ஆர்கானிக் பொருட்களை விற்கறதுல இருக்கற பிரச்னைகளை அலசுனேன். சென்னையில் ஆரம்பிச்ச வேகத்திலேயே நிறைய கடைகளை மூடிட்டாங்க. அதுக்கு சில காரணங்கள் இருந்துச்சு. நாட்டு மருந்துக்கடை மாதிரி இறுக்கமா கடைகளை வச்சிருந்தாங்க. ஏ.சி. போட்டு, ஷோரூம் வச்சு பிரமாண்டமா யாரும் செய்யலே. அதனால நமக்கு தொடர்பில்லாத இடம்னு மக்கள் நினைச்சாங்க.

கடுகுல இருந்து வெங்காயம் வரைக்கும் எல்லாப் பொருளும் அந்தக் கடையில கிடைக்கணும். அப்போதான் தேடி வருவாங்க. ரசாயனத்தில விளையுற பொருட்களைவிட இயற்கைப்பொருட்களோட விலை 20 சதவீதம் அதிகமா இருக்கும். அதனால இதை வாங்கற மக்கள் வசிக்கிற பகுதிகள்லதான் கடை தொடங்கணும். எல்லாத்தையும் அலசி ஒரு புராஜெக்ட் ரெடி பண்ணினேன். கையோட ராஜினாமா லெட்டரையும் அனுப்பிட்டேன்!’’ - விளக்குகிறார் தைரியமான முடிவெடுத்த அந்தத் தருணத்தை.

முதலில் வயலில் இறங்கி இயற்கை விவசாயம் முழுமையாகக் கற்றபிறகே அடுத்த அடி எடுத்து வைத்தார். ‘‘வெளிமாநிலங்களுக்குப் போய் அங்கு இயற்கை விவசாயம் செய்றவங்களைப் பாத்து பிசினஸ் பேசுனேன். தமிழ்நாட்டுலயும் தேடிப் பிடிச்சு ஒப்பந்தம் போட்டேன். சென்னை எனக்குப் புதுசுங்கிறதால கல்லூரி நண்பர்கள் அருள்ராஜ், ஜான் ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு, கொட்டிவாக்கத்தில முதல் கடையைத் திறந்தேன். 5 லட்சம் ரூபா முதலீடு.

வெறும் வறட்டு வியாபாரமா இல்லாம நிறைய புதுமைகள் செஞ்சோம். இயற்கை தானியங்கள்ல இனிப்புகள் செஞ்சு வாடிக்கையாளர்களுக்கு இலவசமா கொடுத்தோம். பாரம்பரிய அரிசி ரகங்கள்ல செய்யப்பட்ட உணவுகளை வச்சு ‘ஃபுட் ஃபெஸ்டிவல்’ நடத்துனோம். பீச்ல ஸ்டால் போட்டு சாம்பிள் கொடுத்தோம். கஸ்டமர்கள் மொபைல் நம்பரை வாங்கிவச்சு புதிய பொருட்கள் வரும்போது எஸ்எம்எஸ் அனுப்பினோம். முடக்கத்தான், முள்ளுமுருங்கைன்னு கிடைக்காத பொருளையெல்லாம் கொண்டுவந்து கொடுத்தோம். ஒரே வருஷத்தில நாங்க எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு!’’ - மகிழ்கிறார் ரூசோ.

இப்போது தனியாக 3 கடைகளை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதுமுள்ள கடைகளுக்கு மொத்த சப்ளை செய்கிறார். நகரத்து வெம்மையை போக்கி வீடுகள்தோறும் பசுமை பூக்கச்செய்யும் அரிய பணியையும் செய்கிறார். கான்க்ரீட்டுக்குத் தப்பி மிஞ்சியிருக்கும் இடங்களிலும் மாடியிலும் இயற்கை முறைப்படி தோட்டம் அமைத்துத் தருகிறார். விதைகளும் பயிற்சியும் அளிக்கிறார். ஈகோ டூரிஸம் என்ற பெயரில் பசுமைச்சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.

‘‘இப்போ நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். சுதந்திரமா, திருப்தியா வேலை செய்றேன். தலைமைப் பொறியாளரா ஆகியிருந்தா என்ன சம்பாதிப்பேனோ, அதைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். மனிதர்களுக்கு மட்டுமில்லாம மண்ணுக்கும் சேவை செய்ற திருப்தி இருக்கு...’’

உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் உற்சாகத்தைக் கிளறிவிட்டு நிறைவுசெய்கிறார் ரூசோ!

நன்றி :- தினகரன் கட்டுரை Via சத்தியானந்தன் சுப்பிரமணியன் பானுமதி
ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...

மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை...

இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? ரூசோ அப்படித்தான் வந்து நின்றார். அதிர்ந்து போனது குடும்பம். ‘‘இனி என்ன செய்யப்போறே?’’ - கேட்டார் ரூசோவின் அப்பா தைனிஸ். ‘‘விவசாயம் பாக்கப்போறேன்...’’ என்றார் ரூசோ! ‘‘வேலைன்னா ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும். பாதுகாப்பான வாழ்க்கை... கை நிறைய பணம்... இதெல்லாம் ஓகேதான். ஆனா, நம்மை நிரூபிக்கிற அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கணுமே. அதுக்காகத்தான் அப்படி ஒரு ரிஸ்க் எடுத்தேன்!’’ - சிரிக்கிறார் ரூசோ.

சிவகங்கை மாவட்டம் கல்லலை ஒட்டியுள்ள முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ரூசோ. ‘மரைன் டெக்னாலஜி’ படித்துவிட்டு கை நிறைய சம்பாதித்தவர், இயற்கை விவசாயம் செய்வதற்காக வேலையை விட்டுவிட்டு வந்து நின்றார். இன்று சென்னையில் திருவான்மியூர், பெசன்ட் நகர், நீலாங்கரை ஆகிய இடங்களில் ‘தி நேச்சுரல் ஸ்டோர்’ என்ற இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை மையத்தை நடத்துகிறார். மாதம் ரூ.15 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடக்கும் இவரது கடைகளில் 30க்கும் அதிகமானோர் வேலை செய்கிறார்கள்.

‘‘அப்பாவுக்கு என்னை எஞ்சினியர் ஆக்கிப் பாக்கணும்னு ஆசை. என் கனவு வேற... வித்தியாசமா ஏதாவது பிசினஸ் பண்ணணும். கடைசியில அப்பாதான் ஜெயிச்சார். படிப்பு முடிச்சவுடனே ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வில ஜூனியர் எஞ்சினியரா வேலை கிடைச்சுச்சு. 40 ஆயிரம் ரூபா சம்பளம். பாம்பே பறந்துட்டேன். கப்பல்ல ஜெனரேட்டரை இயக்குறது, எஞ்சின் மெயின்டனன்ஸ், பாய்லர், பம்புகளை பராமரிக்கிறது... இதுதான் வேலை. கடலாறு மாதம், நாடாறு மாதம்!’’ - மெல்லிய புன்னகை படர பேசுகிறார் ரூசோ.

இவருக்கு 2 சகோதரிகள். மூத்தவர் ராஜரீஹா, எம்.பி.ஏ படித்தவர். மா, பலா, நெல்லி என 100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறார். இளையவர் ஜோஸ்பினுக்கு தேனீ வளர்ப்புதான் தொழில். அப்பா ஓய்வுபெற்ற பிறகு, மூத்த அக்காவின் விவசாயத்தைப் பார்த்துக் கொள்கிறார்.

“வேலைக்குச் சேர்ந்து ரெண்டாவது வருஷம் சீனியர் எஞ்சினியரா ஆகிட்டேன். 1 லட்சம் ரூபா சம்பளம். எல்லா வசதிகளும் இருந்தும் மனசு மட்டும் வேலையில ஒட்டலே. எந்த சவாலும் இல்லாத வேலை. தினமும் அதே கடல்... அதே கப்பல்... அதே எஞ்சின்... வெறுப்பாயிடுச்சு. ‘இதில என்ன சாதிக்கப் போறேன்’னு மனசு கேட்குது. இன்னும் மூணு வருஷத்தில தலைமைப் பொறியாளர் ஆகலாம். மாசம் 5 லட்சம் ரூபா சம்பளம் கிடைக்கும். ஆனா, இதே கப்பல்தான்... இதே கடல் தான்... இதே எஞ்சின்தான்... கற்பனை பண்ணவே கஷ்டமா இருந்துச்சு...

ஒருமுறை முத்துப்பட்டிக்கு வந்திருந்தப்போ இயற்கை விவசாயிகள் கூட்டத்துக்கு அக்காகூட போயிருந்தேன். கப்பல் வேலையை விட்டுட்டு விவசாயத்தில இறங்கணும்னு முடிவெடுத்தது அங்கேதான். இன்னைக்கு சந்தைக்கு வர்ற எல்லா உணவுப்பொருளும் ரசாயனத்துல குளிச்சுத்தான் வருது. நிலமும் ரசாயனத்துக்குப் பழகிருச்சு. நிலத்தை மீட்டு இயற்கை விவசாயம் செய்றது சாதாரணமில்லை. ஆனா, அப்படி விளைவிக்கிற பொருட்களுக்கு எங்க பகுதியில மரியாதை கிடைக்கலே. பளபளப்பும் கலரும்தான் மக்களுக்கு பெரிசா தெரியுது. அந்தக் கூட்டத்தில விவசாயிகள் இந்த விஷயங்களை ஆதங்கமா பேசினாங்க. அப்போதான் எனக்குள்ள ஒரு பொறி கிளம்புச்சு. நாம ஏன் இந்தப் பொருட்களை மார்க்கெட் பண்ணக்கூடாது?
செயல்ல இறங்கிட்டேன். முதல்ல ஆர்கானிக் பொருட்களை விற்கறதுல இருக்கற பிரச்னைகளை அலசுனேன். சென்னையில் ஆரம்பிச்ச வேகத்திலேயே நிறைய கடைகளை மூடிட்டாங்க. அதுக்கு சில காரணங்கள் இருந்துச்சு. நாட்டு மருந்துக்கடை மாதிரி இறுக்கமா கடைகளை வச்சிருந்தாங்க. ஏ.சி. போட்டு, ஷோரூம் வச்சு பிரமாண்டமா யாரும் செய்யலே. அதனால நமக்கு தொடர்பில்லாத இடம்னு மக்கள் நினைச்சாங்க.

கடுகுல இருந்து வெங்காயம் வரைக்கும் எல்லாப் பொருளும் அந்தக் கடையில கிடைக்கணும். அப்போதான் தேடி வருவாங்க. ரசாயனத்தில விளையுற பொருட்களைவிட இயற்கைப்பொருட்களோட விலை 20 சதவீதம் அதிகமா இருக்கும். அதனால இதை வாங்கற மக்கள் வசிக்கிற பகுதிகள்லதான் கடை தொடங்கணும். எல்லாத்தையும் அலசி ஒரு புராஜெக்ட் ரெடி பண்ணினேன். கையோட ராஜினாமா லெட்டரையும் அனுப்பிட்டேன்!’’ - விளக்குகிறார் தைரியமான முடிவெடுத்த அந்தத் தருணத்தை.

முதலில் வயலில் இறங்கி இயற்கை விவசாயம் முழுமையாகக் கற்றபிறகே அடுத்த அடி எடுத்து வைத்தார். ‘‘வெளிமாநிலங்களுக்குப் போய் அங்கு இயற்கை விவசாயம் செய்றவங்களைப் பாத்து பிசினஸ் பேசுனேன். தமிழ்நாட்டுலயும் தேடிப் பிடிச்சு ஒப்பந்தம் போட்டேன். சென்னை எனக்குப் புதுசுங்கிறதால கல்லூரி நண்பர்கள் அருள்ராஜ், ஜான் ரெண்டு பேரையும் சேத்துக்கிட்டு, கொட்டிவாக்கத்தில முதல் கடையைத் திறந்தேன். 5 லட்சம் ரூபா முதலீடு.

வெறும் வறட்டு வியாபாரமா இல்லாம நிறைய புதுமைகள் செஞ்சோம். இயற்கை தானியங்கள்ல இனிப்புகள் செஞ்சு வாடிக்கையாளர்களுக்கு இலவசமா கொடுத்தோம். பாரம்பரிய அரிசி ரகங்கள்ல செய்யப்பட்ட உணவுகளை வச்சு ‘ஃபுட் ஃபெஸ்டிவல்’ நடத்துனோம். பீச்ல ஸ்டால் போட்டு சாம்பிள் கொடுத்தோம். கஸ்டமர்கள் மொபைல் நம்பரை வாங்கிவச்சு புதிய பொருட்கள் வரும்போது எஸ்எம்எஸ் அனுப்பினோம். முடக்கத்தான், முள்ளுமுருங்கைன்னு கிடைக்காத பொருளையெல்லாம் கொண்டுவந்து கொடுத்தோம். ஒரே வருஷத்தில நாங்க எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு!’’ - மகிழ்கிறார் ரூசோ.

இப்போது தனியாக 3 கடைகளை நடத்துகிறார். தமிழ்நாடு முழுவதுமுள்ள கடைகளுக்கு மொத்த சப்ளை செய்கிறார். நகரத்து வெம்மையை போக்கி வீடுகள்தோறும் பசுமை பூக்கச்செய்யும் அரிய பணியையும் செய்கிறார். கான்க்ரீட்டுக்குத் தப்பி மிஞ்சியிருக்கும் இடங்களிலும் மாடியிலும் இயற்கை முறைப்படி தோட்டம் அமைத்துத் தருகிறார். விதைகளும் பயிற்சியும் அளிக்கிறார். ஈகோ டூரிஸம் என்ற பெயரில் பசுமைச்சுற்றுலா அழைத்துச் செல்கிறார்.

‘‘இப்போ நிக்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன். சுதந்திரமா, திருப்தியா வேலை செய்றேன். தலைமைப் பொறியாளரா ஆகியிருந்தா என்ன சம்பாதிப்பேனோ, அதைவிட அதிகமா சம்பாதிக்கிறேன். மனிதர்களுக்கு மட்டுமில்லாம மண்ணுக்கும் சேவை செய்ற திருப்தி இருக்கு...’’

உள்ளுக்குள் உறைந்து கிடக்கும் உற்சாகத்தைக் கிளறிவிட்டு நிறைவுசெய்கிறார் ரூசோ!

நன்றி :- தினகரன் கட்டுரை Via சத்தியானந்தன் சுப்பிரமணியன் பானுமதி

திருவள்ளுவர் : அழிக்கப்பட்ட வரலாற்று சான்றுகளில் ஒருவர்

திருவள்ளுவர் : அழிக்கப்பட்ட வரலாற்று சான்றுகளில் ஒருவர்
திருவள்ளுவர் பற்றி நாம் அறியப்படாத உண்மைகள்...!
நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரை பற்றிய ரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்)

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044  ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன. 
இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.
ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

இந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் நீங்கள் ஒரு தமிழன் என்றால்..

post by navn at 18-01-2013 (6.30pm)
www.facebook.com/goodfotos
திருவள்ளுவர் பற்றி நாம் அறியப்படாத உண்மைகள்...!
நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரை பற்றிய ரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்)

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.
இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.
ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

இந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் நீங்கள் ஒரு தமிழன் என்றால்..

Saturday, January 19, 2013

Tamil history

சிந்து சமவெளியில் சில அறிய வடிவங்களும் அதன் உண்மையான விளக்கங்களும் :

சிந்து சமவெளியில் கானபெரும் சில வடிவங்கள் மற்றும் அதன் விளக்கங்கள் தமிழ் மொழியுடன் பெரிதும் ஒத்து போகிறது,

1, முதல் படம் மீனை குறித்து அதற்க்கு அர்த்தமாக விண்மீனை குறிக்கிறது,

தமிழில்: மீன் , விண்மீன் எல்லாம் ஒன்றுதான் .

2, மீன் படம் வரையப்பட்டு அதன் மேல் ஒரு குறியீடு இது உயர்ந்த மீன் அல்லது கருப்பு விண்மீனை குறிக்கிறது. அதாவது சனி(Saturn) கிரகத்தை குறிக்கிறது.

தமிழில்: மேல் மேன் , மேன்மை , மை போன்றவையுடன் ஒத்து மேன் மீன், மை மீன்,

3 , ஒரு மீன் வரையப்பட்டு அதன் உடலில் நடுவில் ஒரு கோடு இடப்பட்டுள்ளது, இது வெட்டப்பட்ட மீன் அல்லது பச்சை விண்மீன் அதாவது புதன்(Mercury) கிரகத்தை குறிக்கிறது

தமிழில் : ஒரு மீனை இரண்டாக வெட்டுவது பகுத்து பிரிப்பதாகும் அகவே "பகுமீன்" என்றும் பகு, பச்சை, பச்சைமீன் என்பது பொருள் தரும்

4, ஒரு மீன் வரையப்பட்டு அதன் அருகில் இரண்டு கோடுகள் வரையப்பட்டுள்ளது இதை குறிப்பிட்ட இடைவெளியில் செல்லும் மீன்கள் என்று பொருள் மற்றும் வெண்மையான வெள்ளி(Venus) கிரகத்தை குறிக்கிறது

தமிழில் : இடைவெளி , வெளி , வெள்ளி ,வெள்ளை பூமிக்கு அருகே நம்முடனே இணையான இடைவெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் கொள் வெள்ளி

5. ஒரு மீன் அதன் அருகே ஒரு மரம் போல் வரையப்பட்டு இருக்கும் இவை அத்திபழ மரமும் ஒரு மீனையும் குறிக்குமாம், மற்றும் வடக்கு மீன் என்றும் பொருள் தருமாம்

தமிழில் : அத்திப்பழ மரம் தமிழ் இலக்கியத்தில் குறுந்தொகையில் அதவம் என்று சொல்வர் அதவ மரத்திற்கு இயற்கையில் எதிர்ப்பு தன்மை அதிகம் , இயற்கையில் எதிர்ப்பு தன்மை என்பது பூமியின் விசைக்கு எதிரான திசை(வட) என்றும் பொருள் தரும் மற்றும் வடக்கு நோக்கி வரையப்பட்டு இருக்கும் அந்த படம் வட திசையையும் குறிக்கும் எனவே "வடமீன்" என்று சொல்லலாம்

6. இங்கு முன்பு பார்த்த ஒரு மரமும் அதன் அருகே இராணு கோடுகளும் உள்ளன, இவள் இடைவெளி உள்ள வடக்கு நோக்கிய வெள்ளி என்று அர்த்தம்

தமிழில்: முன்பு பார்த்ததுபோலவே "வட" என்ற சொல் பொருந்தி, இடைவெளி , வெளி , வெள்ளி, வெள்ளை என்று பொருந்தி "வடவெள்ளி" என்று பொருள் தரும்

7. ஒரு மீன் படம் வரையப்பட்டு அதன் அருகே ஆறு கோடுகள் வரையப்பட்டுள்ளன இதன் பொருள் ஆறு மீன் அல்லது ஆறு விண்மீன் என்பதாம்

தமிழில்: மீன் மற்றும் ஆறு என்பதை சேர்த்து ஆறுமீன். என்று பொருந்துகிறது


இப்படியிருக்க சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று இன்றும் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது இந்திய அரசு


திமிருடம் பகிருங்கள் தமிழனென்று



காப்புரிமை மீறவேண்டாம்
நன்றி
கி.கோகுல கிருட்டிணன்
Tamil (தமிழ்)
சிந்து சமவெளியில் சில அறிய வடிவங்களும் அதன் உண்மையான விளக்கங்களும் :

சிந்து சமவெளியில் கானபெரும் சில வடிவங்கள் மற்றும் அதன் விளக்கங்கள் தமிழ் மொழியுடன் பெரிதும் ஒத்து போகிறது, 

1, முதல் படம் மீனை குறித்து அதற்க்கு அர்த்தமாக விண்மீனை குறிக்கிறது, 

தமிழில்: மீன் , விண்மீன் எல்லாம் ஒன்றுதான் .

2, மீன் படம் வரையப்பட்டு அதன் மேல் ஒரு குறியீடு இது உயர்ந்த மீன் அல்லது கருப்பு விண்மீனை குறிக்கிறது. அதாவது சனி(Saturn) கிரகத்தை குறிக்கிறது. 

தமிழில்: மேல் மேன் , மேன்மை , மை போன்றவையுடன் ஒத்து மேன் மீன், மை மீன்,   

3 , ஒரு மீன் வரையப்பட்டு அதன் உடலில் நடுவில் ஒரு கோடு இடப்பட்டுள்ளது, இது வெட்டப்பட்ட மீன் அல்லது பச்சை விண்மீன் அதாவது புதன்(Mercury) கிரகத்தை குறிக்கிறது 

தமிழில் : ஒரு மீனை இரண்டாக வெட்டுவது பகுத்து பிரிப்பதாகும் அகவே "பகுமீன்" என்றும்  பகு, பச்சை, பச்சைமீன் என்பது பொருள் தரும் 

4, ஒரு மீன் வரையப்பட்டு அதன் அருகில் இரண்டு கோடுகள் வரையப்பட்டுள்ளது இதை குறிப்பிட்ட இடைவெளியில் செல்லும் மீன்கள் என்று பொருள் மற்றும் வெண்மையான வெள்ளி(Venus) கிரகத்தை குறிக்கிறது 

தமிழில் : இடைவெளி , வெளி , வெள்ளி ,வெள்ளை பூமிக்கு அருகே நம்முடனே இணையான இடைவெளியில்  சுற்றிக்கொண்டு இருக்கும் கொள் வெள்ளி 

5. ஒரு மீன் அதன் அருகே ஒரு மரம் போல் வரையப்பட்டு இருக்கும் இவை அத்திபழ மரமும் ஒரு மீனையும் குறிக்குமாம், மற்றும் வடக்கு மீன் என்றும் பொருள் தருமாம் 

தமிழில் : அத்திப்பழ மரம் தமிழ் இலக்கியத்தில் குறுந்தொகையில் அதவம் என்று சொல்வர் அதவ மரத்திற்கு இயற்கையில் எதிர்ப்பு தன்மை அதிகம் , இயற்கையில் எதிர்ப்பு தன்மை என்பது பூமியின் விசைக்கு எதிரான திசை(வட) என்றும் பொருள் தரும் மற்றும் வடக்கு நோக்கி வரையப்பட்டு இருக்கும் அந்த படம் வட திசையையும் குறிக்கும் எனவே "வடமீன்" என்று சொல்லலாம் 

6. இங்கு முன்பு பார்த்த ஒரு மரமும் அதன் அருகே இராணு கோடுகளும் உள்ளன, இவள் இடைவெளி உள்ள வடக்கு நோக்கிய வெள்ளி என்று அர்த்தம்

தமிழில்: முன்பு பார்த்ததுபோலவே "வட" என்ற சொல் பொருந்தி, இடைவெளி , வெளி , வெள்ளி, வெள்ளை என்று பொருந்தி "வடவெள்ளி" என்று பொருள் தரும் 

7. ஒரு மீன் படம் வரையப்பட்டு அதன் அருகே ஆறு கோடுகள் வரையப்பட்டுள்ளன இதன் பொருள் ஆறு மீன் அல்லது ஆறு விண்மீன் என்பதாம் 

தமிழில்: மீன் மற்றும் ஆறு என்பதை சேர்த்து ஆறுமீன். என்று பொருந்துகிறது 


இப்படியிருக்க சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று இன்றும் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது இந்திய அரசு 


திமிருடம் பகிருங்கள் தமிழனென்று 



காப்புரிமை மீறவேண்டாம் 
நன்றி 
கி.கோகுல கிருட்டிணன் 
@[499052330137783:274:Tamil (தமிழ்)]

Saturday, January 5, 2013

.............. யாளி - ஒரு புரியாத புதிர் ! ........................


.............. யாளி - ஒரு புரியாத புதிர் ! ........................

தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாளிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாளி வரிசை " என்றே அழைக்கிறோம். ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாளிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாளி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.

யாளிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாளியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாளி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாளியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாளியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாளி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா? 

எதற்குமே பதில் இல்லை !!!!

நன்றி : சசிதரன்
‎.............. யாளி - ஒரு புரியாத புதிர் ! ........................

தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாளிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாளி வரிசை " என்றே அழைக்கிறோம். ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாளிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாளி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.

யாளிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாளியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாளி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாளியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாளியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாளி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?

எதற்குமே பதில் இல்லை !!!!

what an art...

ELACHIPALAYAM's photo.
விவரிக்க வார்த்தைகள் இல்லை!!!!,,,(திருச்செங்கோடு)
 
விமானத்தின் கூரையில் எட்டு கிளிகள், எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது !. . இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும், ஆனால் கையில் வராது ! இது
 வும் அந்த கல்லில் இணைந்தது தான் !. இந்த சிற்பத்தை சுற்றி அழகிய சிறிய வடிவிலானா சிற்பங்கள் அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றது. அதுவும் அதே கல்லில் தான் , இவற்றை எல்லாம் அலங்கங்கரிக்க ஒரே கல்லினால் செய்யப்பட்ட நான்கு கற்சங்கிலிகள், நான்கு மூலைகளில் தொங்கிக்கொண்டுள்ளது ! மனிதர்கள் தான் செய்தார்களா ?!.
 
இடம் : அர்த்தனாரீஸ்வரர் கோயில், "திருக்கொடி மாடச் செங்குன்றூர்" ஊர் பெயர் புரியவில்லையா ? ( திருச்செங்கோடு ) நாமக்கல்
விவரிக்க வார்த்தைகள் இல்லை!!!!,,,(திருச்செங்கோடு)

விமானத்தின் கூரையில் எட்டு கிளிகள், எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது !. . இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும், ஆனால் கையில் வராது ! இது
வும் அந்த கல்லில் இணைந்தது தான் !. இந்த சிற்பத்தை சுற்றி அழகிய சிறிய வடிவிலானா சிற்பங்கள் அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றது. அதுவும் அதே கல்லில் தான் , இவற்றை எல்லாம் அலங்கங்கரிக்க ஒரே கல்லினால் செய்யப்பட்ட நான்கு கற்சங்கிலிகள், நான்கு மூலைகளில் தொங்கிக்கொண்டுள்ளது ! மனிதர்கள் தான் செய்தார்களா ?!.

இடம் : அர்த்தனாரீஸ்வரர் கோயில், "திருக்கொடி மாடச் செங்குன்றூர்" ஊர் பெயர் புரியவில்லையா ? ( திருச்செங்கோடு ) நாமக்கல்

old coins

சேர நாணயங்களில் காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்
சேர நாணயங்களில் காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

Friday, January 4, 2013

non veg sucks...

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :

பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ?

பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...

இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி 180rs என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது,,, மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்....

நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது .....

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!



ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?

மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.

கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.

நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.

'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது...

tamil lan's


தமிழில் "கிரெம்ளின் மாளிகை" (ரசிய அதிபர் மாளிகை )

ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!

தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.
தமிழில் "கிரெம்ளின் மாளிகை" (ரசிய அதிபர் மாளிகை )

ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!

தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.

capitalism

உணவை கூட பொழுதுபோக்கிற்காக

உண்பவன் பணக்காரன்..

கொஞ்சம் சாப்பிட்டு...

நிறைய வீணாக்கி...


உணவிற்காகவே பொழுதுமுழுக்க

உழைப்பவன் ஏழை...

பசி இருந்தும்

கொஞ்சம் சாப்பாடு...

நிறைய உழைப்பு..
உணவை கூட பொழுதுபோக்கிற்காக 

உண்பவன் பணக்காரன்.. 

கொஞ்சம் சாப்பிட்டு... 

நிறைய வீணாக்கி... 


உணவிற்காகவே பொழுதுமுழுக்க 

உழைப்பவன் ஏழை... 

பசி இருந்தும் 

கொஞ்சம் சாப்பாடு... 

நிறைய உழைப்பு..

foriegn idiots

கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் கோவிலின் பெருமை!

உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர்.

இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 -1372)

தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது.

உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது. 

ஆனால். சாகாக்கலை அறிந்த சித்தர்களுக்கு இது மிகச் சாதாரண வேலை. 64 கலைகளையும் தாண்டி, 65வது கலையாகிய சாகாக்கலை/ மரணமில்லா பெருவாழ்வு பெற்ற சித்தர்கள் பிரபஞ்சத்தையே மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தவர்களென சித்தர் ஏடுகள் கூறுகின்றன. இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற பல கலைகள் / தடயங்கள் நம்மை இன்றும் வியக்கவே வைக்கின்றன.

வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை! சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம்!

தகவலுதவி & நன்றி:
சசிதரன் 
 
கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் கோவிலின் பெருமை!

உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர்.

இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது.

ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 -1372)

தஞ்சையில் உள்ள சித்தர்களின் கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் (80,000 கிலோ) எடை கொண்டது.

உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம். இப்போதுள்ள எந்தத் தொழில் நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி கட்டப்பட்டது? என்பது உலகுக்கே வியப்பாக உள்ளது.

ஆனால். சாகாக்கலை அறிந்த சித்தர்களுக்கு இது மிகச் சாதாரண வேலை. 64 கலைகளையும் தாண்டி, 65வது கலையாகிய சாகாக்கலை/ மரணமில்லா பெருவாழ்வு பெற்ற சித்தர்கள் பிரபஞ்சத்தையே மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தவர்களென சித்தர் ஏடுகள் கூறுகின்றன. இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற பல கலைகள் / தடயங்கள் நம்மை இன்றும் வியக்கவே வைக்கின்றன.

வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை! சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம்!

தகவலுதவி & நன்றி:
சசிதரன்

Thursday, January 3, 2013

dhoni the great

113 in the first Match
52 in the second Match..

Stood unbeaten in both the Matches nd fought bravely till the very END...

Even after playing so well, even after struggling very hard nd fighting alone when others fail, MS Dhoni takes the blame of the defeat upon himself.. He stands in front of the team whenever they face a defeat... He says that 'I take the responsibility of this loss nd I am ready to be the PUNCHING BAG for the sake of my Team'... 

This shows what a TRUE FIGHTER nd a TRUE INDIAN he is... 

He stands alone, fights till the very end, gives HIS BEST with the bat nd still is ready to take the blame, take the criticism upon himself for defeats..

Nd then the haters say that he is not a True Indian nd all that rubbish..

Who takes the blame upon himself even after playing so well??!! No one na.. But our MS Dhoni does.... :)

I am feeling really PROUD of being a MS Dhoni fan today... :)

What about you???!!..

| LIKE, TAG & SHARE | this pic to show your approval that you too are PROUD of being a MS Dhoni fan.. :)

<3 <3 <3

113 in the first Match
52 in the second Match..


Stood unbeaten in both the Matches nd fought bravely till the very END...

Even after playing so well, even after struggling very hard nd fighting alone when others fail, MS Dhoni takes the blame of the defeat upon himself.. He stands in front of the team whenever they face a defeat... He says that 'I take the responsibility of this loss nd I am ready to be the PUNCHING BAG for the sake of my Team'...

This shows what a TRUE FIGHTER nd a TRUE INDIAN he is...

He stands alone, fights till the very end, gives HIS BEST with the bat nd still is ready to take the blame, take the criticism upon himself for defeats..

Nd then the haters say that he is not a True Indian nd all that rubbish..

Who takes the blame upon himself even after playing so well??!! No one na.. But our MS Dhoni does.... :)

I am feeling really PROUD of being a MS Dhoni fan today... :)

What about you???!!..

| LIKE, TAG & SHARE | this pic to show your approval that you too are PROUD of being a MS Dhoni fan.. :)

♥ ♥ ♥

Wednesday, January 2, 2013

what to do for growth indian economy

நம் நாட்டுக்காக இரண்டு நிமிடங்கள்...!

.......PLEASE SHARE THIS......

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு. விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம். கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா...?

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 39.
இன்று 1 US $ = ரூ 53.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா...? அதுதான் இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது...! நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே.

ஆனால் விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது. இதை தடுக்கவே முடியாதா...? முடியும். நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-
வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-
வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-
வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-
வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-
வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-
வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-
வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-
வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-
வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-
வாங்கவும்:-
USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.

Food Items:-
வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது...!

periyar's taught


இந்தியாவில் சாதி அகம்பாவம் 
இருக்கிற வரையில், 
இந்தியர்கள் தங்களுடைய 
யோக்கியதையினாலோ, 
ஒற்றுமையினாலோ, 
சாமர்த்தியத்தினாலோ 
மனிதனாக முடியவே முடியாது. 

- தோழர் ஈ.வெ.ரா,
 ['குடி அரசு', 02.08.1925]
இந்தியாவில் சாதி அகம்பாவம்
இருக்கிற வரையில்,
இந்தியர்கள் தங்களுடைய
யோக்கியதையினாலோ,
ஒற்றுமையினாலோ,
சாமர்த்தியத்தினாலோ
மனிதனாக முடியவே முடியாது.

- தோழர் ஈ.வெ.ரா,
['குடி அரசு', 02.08.1925]

che taught

"எங்களது ஒவ்வொரு செயல்பாடும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்ட அறைகூவல் தான்.இந்த அறைகூவல் ஏதாவதொரு காதில் விழுமானால்,

எங்கள் துப்பாக்கிகளை ஏந்தும் இன்னொரு கைகள் கிடைக்குமானால் மரணம் எம்மை எங்கே எதிர்கொண்டாலும் அதற்கு தயார் !"



- தோழர் சே குவேரா 
 
"எங்களது ஒவ்வொரு செயல்பாடும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்ட அறைகூவல் தான்.இந்த அறைகூவல் ஏதாவதொரு காதில் விழுமானால்,

எங்கள் துப்பாக்கிகளை ஏந்தும் இன்னொரு கைகள் கிடைக்குமானால் மரணம் எம்மை எங்கே எதிர்கொண்டாலும் அதற்கு தயார் !"



- தோழர் சே குவேரா

history of tamilnadu


களப்பிரர் - தமிழகத்தின் இருண்ட காலம்...

களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு: 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D
களப்பிரர் - தமிழகத்தின் இருண்ட காலம்...

களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D