Thursday, October 10, 2013

யாருக்கு போடுவது ஓட்டு ?

யாருக்கு போடுவது ஓட்டு ?

2500 மைல் கடல் எல்லை , 
2500 மைல் மலை எல்லை ,
கிழக்கு மேற்க்காக 2000 மைல், 
தெற்கு வடக்காக 2000மைல் ,
உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.2 % ஒரு தீபகற்பநாடு இந்தியா ,

மண்ணுக்கு அடியில்
238 வருடங்களுக்குக்கான தேவையான இரும்பு , 138 வருடங்களுக்கு தேவையான நிலக்கரி , 1850000,கேரட் வைரம் உழைப்பதற்கு 103 கோடி மக்கள் , வற்றாத வளம் கொழிக்க கூடிய ,சிந்து , பிரம்மபுத்திரா, கங்கை , என்றும் வற்றாமல் ஓடிகின்ற ஜீவா நதிகள் , இத்தனை கனிமவளம் உள்ள ஒரு நாட்டில்

80 % மக்களுக்கு
பாதுக்காக்க பட்ட
"குடிநீர் இல்லை" !!! என்பது எவ்வளவு பெரிய இழுக்கு !

57 % மக்களுக்கு படிப்பு அறிவு இல்லை என்பது எவ்வளவு பெரிய இழுக்கு

அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யாமல்
இருக்கும் போது
யார்க்கு போடுவது ஓட்டு ?

எப்படி முன்னேறிய நாடு என்று சொல்ல முடியும் ?

இதுவரை ஆண்ட அரசியல்வாதிகளுக்கு ஏதேனும் பொறுப்பு உள்ளதா ! இல்லை !

இவர்களுக்கு இருந்த ஒரே பொறுப்பு அந்நிய வங்கிகளில் எவ்வளவு அடைத்து வைக்க வேண்டும் என்பது மட்டும் ஒரே குறிக்கோள்

தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் "குவைத் "முன்னேறி விட்டது

தண்ணீர் மிதக்கும் "வெனிஸ் "
முன்னேறி விட்டது

மாடுகளை மட்டும்
வைத்திருக்கும் "டென்மார்க் "முன்னேறி விட்டது

காடுகளை மட்டும் வைத்திருக்கும் "பிலிபைனிஷ்"
முன்னேறி விட்டது

நிலப்பரப்பை மட்டும் வைத்திருக்கும்
"ஆஸ்திரேலியா "முன்னேறி விட்டது

மீன்களை மட்டும் வைத்திருக்கும்
"நார்வே"முன்னேறி விட்டது

கடிகாரத்தை மட்டும் வைத்திருக்கும் "சுவிஸ் "முன்னேறி விட்டது

அறிவியலை மட்டும் வைத்திருக்கும்
"அமெரிக்க "முன்னேறி விட்டது

கூட்டு பண்ணை மட்டும் வைத்திருக்கும் "சோவித் ரஷியா "முன்னேறி விட்டது

மனித உழைப்பை மட்டும் மூலதனமாக வைத்திருக்கும் "ஜப்பான் "முன்னேறி விட்டது

ஜப்பானில்
இரண்டாம் உலக போரில் ,
ஹீரோசமா , நாகசாகி , அமெரிக்க ஏகதிப்பத்தியம் அணுகுண்டுகளை வீசி எரிந்து லட்சகணக்கான மக்கள் கொன்று குவிக்கபட்டு , இரண்டு பெரும் நகரங்கள் சூறை யாட ப்பட்டு ,

எரிமலையின் மடியில் உள்ள ஜப்பான்,

உலக நாகரிக ஓட்ட பந்தியத்தில் , நிலவளம் இல்லை, நீர்வளம் இல்லை, மக்கள் பலம் இல்லை , தனது சொந்த ஜப்பான்மொழியில் மேற்படிப்பு கற்கும் ஜப்பான்
எப்படி உலக நாகரிக ஓட்ட பந்தயத்தில் எப்படி முதல் இடத்தில் உள்ளது !!!

அணைத்து வளங்களும் உள்ள ஒருநாட்டில் ஏன் !!!

முன்னேறி நாடுகளில் இடம் கிடைக்க முக்கு முக்கு என்று முக்குகிறது இந்தியா !!!

உலக பார்வையில் இந்தியா மிக பெரிய வர்த்தக சந்தை
இந்தியா உள்ள 1,210 ,193,422கோடி மக்களும் உலக வர்த்தகத்தின் சந்தாகாரார்கள்,

உலகத்தில் எது உருவாக்க பட்டாலும் உடனே வருவது இந்தியாவிற்க்குதான்
ஏன் ?
என்றால் இங்கு வாங்குவார்கள் அதிகம் .

உருவாக்குவார்கள் குறைவு !!!

உலகத்தின் அனைவரும் போற்றும் வைகையில் எந்த வித பொருளையும்
உருவாக்கப்படவில்லை !!! ஆதலால் முதாளிகளும் குறைவு .

அந்நிய நாட்டின் வங்கிகளில் மட்டும் இந்தியா நாட்டை ஆண்ட
அனைவருக்கும் இருப்பு தொகை உள்ளது, எப்படி என்று இதுவரை விளங்கவில்லை

ஆனால் நாட்டை மட்டும் நம்பி உள்ள உள்ள மக்களுக்கு 36சதவிகிதம் மக்களுக்கு இருக்க வீடு இல்லை .

என்பது எவ்வளவு பெரிய இழுக்கு
அடிப்படை தேவைகள் பூரித்தி அடையாமல் எப்படி இவர்கள் மீண்டும் ஓட்டு கேட்கிறார்கள்

சற்று யோசித்து பாருங்கள் காலையில் பல்துடைப்பும் தொடங்கி இரவு விளக்கை அனைக்குவரைக்கும் உங்க நாட்டில் கண்டுபிடிக்க பொருளை நீங்கள் உபயோக்கீர்கள் என்று எண்ணி பாருங்கள் ?

உண்மை புரியும்

இந்தியா முன்னேறிய நாடு மறாவும்

வல்லரசு நாடு எப்படி மாறும் என்று உங்களுக்கு புரியும் !!!!!!

இந்த அரசியல் , சினிமாவும் , ஊடங்களும் நம்மை ஏயித்தை தவிர வேறென்ன என்ன செய்தது

இப்படி இருக்கையில் எப்படி வல்லரசு நாடகா மாறமுடியும்

இந்தியா வல்லரசு நாடக மாற வேண்டுமானால் அடிப்படை தேவைகளும் , புதிய கண்டுபிடிப்புகளும் , எப்போது உருவாகும் அப்போதுதான் இந்தியா வல்லரசு நாடகா மாறும்

இந்தியா அரசியல்வாதிகளுக்கு யார் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அந்நிய வங்கிகளில் தனது கணக்கை துவங்க வேண்டும் என்ற போட்டி அதிகமே தவிர வேறென்ன இருக்கமுடியும் !!!!

இப்படி அடிப்படை வசதி கூட இதுவரை செய்யாமல் இருக்கும் இந்த அரசியல்வாதிகளுக்கு மீண்டும் நம் ஓட்டை பதியவேண்டுமா?
தொடரும்

சிலம்பரசன் தமிழரசன்

No comments:

Post a Comment