Sunday, September 29, 2013

அண்ணாதுரை

எனக்கு மிகவும் பிடித்த தலைவர் பேரறிஞர் அண்ணாதுரை!காரணம் என்னவென்றால்,
அறிஞர் அண்ணா மிகவும் எளிமையானர்;ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்தும்,எந்த ஒரு தமிழனிடமும் ஒரு சிறிய ஆங்கில வார்த்தைகூட பேசியது கிடையாது.அறிஞர்அண்ணாவின் பாட்டி ஒருநாள்,அண்ணாவிடம் ஆ
ங்கிலத்தில் பேசுமாறு வேண்டுகோள் விடுத்தார்.ஆனால் அறிஞர் அண்ணாவோ,"நான் ஆங்கிலேயனிடம் மட்டும் தான் ஆங்கிலத்தில் பேசுவேன்" என்று கூறி,ஆங்கிலம் பேச மறுத்துவிட்டார்.நமது அறிஞர் அண்ணா புகையிலை(TOBACCO AND OPIUM) போடும் பழக்கம் உடையவர்;இவரைப் பற்றி கேள்விபட்ட இங்கிலாந்து(ENGLAND) மாணவர்கள்,பார்பதற்கு இவர்(அறிஞர் அண்ணா) 'நாட்டுபுறத்தான்' போல இருக்கிறார்;இவருக்கு எங்கே ஆங்கிலம் தெரியப் போகிறது என்று ஏளனமாக எண்ணிக்கொண்டு,இங்கிலாந்து மாணவர்கள் கேள்வி கேட்க தொடங்கினர்.அவை பின்வருமாறு,

BRITISH STUDENTS:
( ஏளனமாக நகைத்துக் கொண்டு)
'BECAUSE' என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? (can you make the sentence by using because three times in it?)

அறிஞர் அண்ணா(ARIGNAR ANNA):
"No sentence can begin with because because, because is a conjunction.
எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தை
ஏனென்றால். ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்."

Saturday, September 28, 2013

Assassin creed revilation

Today I complete the Assassin Creed Revelation Today, But it is not so easy,
I already complete 2, 3 brotherhood, now this. I am so happy now.

சிதம்பர ரகசியம்! பகுதி-1


சிதம்பர ரகசியம்! பகுதி-1

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல்குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

- Sasi Dharan
 — with Mani Maran.

சிதம்பர ரகசியம்! பகுதி-2




சிதம்பர ரகசியம்! பகுதி-2 

உலகில் உள்ள எல்லா ATOM REACTOR களும், சிவனின் லிங்க வடிவில் மட்டுமே உள்ளது என்ற செய்தியுடன் இந்த பகுதியை துவங்குவோம், அதாவது அணு என்பது தான் உலகின் தொடக்கம், அதனால் உலகை அழிக்கவும் முடியும்.

ஒவ்வொரு அணுவிற்குள்ளும் உள்ள பரமாணு (Sub atomic particle) (ப்ரோட்டான் =>குவார்க் =>க்ளுவான்), ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது, இந்த செயலின் மூலம் ஆக்கல்,அழித்தல் என்ற இரண்டு செயல்பாடுகளுமே நடைபெறுகின்றது. இது இயற்பியல் விதி. இந்த உலகம் என்பதே தடை ஏதுமில்லாத நகர்ந்துகொண்டிருக்கும் அணுக்களால் ஆனதே. தில்லை நடராஜரின் இந்த "ஆனந்த தாண்டவம்" என்ற நிலையை, உலகின் பல இயற்பியல் அறிஞர்கள் "COSMIC DANCE" என்று அழைக்கின்றனர். அறியாமையை காலில் மிதித்துக்கொண்டு ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் நான்கு கைகளுடன் ஆடிக்கொண்டிருப்பதை அணுவின் செயல்பாட்டுடன் ஒப்பிடுகின்றனர்.

அதாவது அணுவின் கட்டமைப்பான (Sub atomic particle ) எப்படி ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே உள்ளதோ, அதே போன்று "ஆடல் கடவுள்" என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.

1) வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதை காட்டுகின்றது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் BIG BANG THEORY என்று அழைக்கின்றனர்.

2) இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது.

3) வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது.

4) இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணக்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது.

இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே பலருக்கு தெரிந்ததே.

Fritjof Capra ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர், பாவம் தமிழர்களுக்கு தான் இது குறித்து தெரியாமல் போனது!. அந்த புத்தகத்தில் நடராஜரின் இந்த ஆனந்த தாண்டவத்தை மிக அழகாக இவ்வாறு விவரிக்கிறார் "every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction…without end…For the modern physicists, then Shiva's dance is the dance of subatomic matter. As in Hindu scriptures, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomena."

உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன்.(பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996).சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச்சிறப்பு!

அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார்.13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும். January 1982 தனது 13 ஆம் எபிசோடில் நடராஜரை இப்படி விவரிக்கிறார். 'The answer lies in Hindu Cosmology." நடராஜரின் சிலையில் உள்ள உடுக்கை காட்டியபடி "This symbolizes creation of the universe, stars, galaxies and the human being." ஒரு கையில் இருந்த நெருப்பை காட்டியபடி "This symbolizes destruction of what has been created." என்று அவரின் உரையை தொடர்கிறார்...

தான் ஏன் இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை தேடி இந்தியா வந்தேன் என்பதற்கு சுவாரசியமான பதிலை இவ்வாறு கூறுகிறார். அதாவது.........

அணுவில் பயணிப்போம்... 

நம் வரலாற்றை


நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்.

என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆம்..! இதுதான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட "குமரிக்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இது ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ்க்கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடந்தான் "குமரிக்கண்டம்".

ஏழு தெங்கநாடு, ஏழு மதுரைநாடு, ஏழு முன்பலைநாடு, ஏழு பின்பலைநாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குரும்பனைநாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது. பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.

தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் சிவன், முருகர், அகத்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது.

இதில் அனைத்துமே அழிந்துவிட்டது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விடயம். இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்.

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்று தேடல் தொடரும்....!
தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே!

இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே. முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் ! தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

Sunday, September 22, 2013

தமிழகத்தி




தமிழகத்திலே உள்ளது பூம்புகார் நகரம் ,பூம்புகார் நகரம் உலகின் முதல் கப்பல் கட்டிய நகரம். அவன் கப்பல் கட்டிய காலத்திலே கிரேக்கன் அவனோடு வணிகம் செய்து இருக்கிறான்.

ஒருமுறை அவன் வணிகம் செய்ய வந்த போது நம்முடைய கப்பலைப் பார்த்து வியந்து அது போலவே ஒரு கப்பலை கட்ட வேண்டும் என்று எண்ணி கப்பலை கட்டிக் கொண்டுவந்து தமிழனிடம் காட்டுகிறான் , அதற்க்கு நம் தமிழன் நாங்கள் வேறு ஒரு கப்பலை கட்டி இருக்கிறோம் இதோ பின்புறம் இருக்கிறது வந்து பாருங்கள் என்றான் இதற்க்கு முன்பு நாங்கள் கட்டிய கப்பல் காற்று அடித்த திசையிலே செல்லக் கூடியது இப்போது நாங்கள் வடிவமைத்திருக்கும் கப்பல் எந்திரம் பொருத்திய கப்பல் நாம் வேண்டிய திசையிலே செலுத்தக் கூடியது என்று காட்டினான்.

என்று கிரேக்கன் அவன் வரலாற்றிலே எழுதி வைத்து இருக்கிறான் பூம்புகார் நகரம் கடலில் புதைந்து உள்ளது. இப்போது அந்த கடலில் புதைந்த பகுதியை ஆராய்ச்சி செய்த அமெரிக்கன் சொல்கிறான் இப்போது இருக்கும் சென்னைப் பட்டணத்தை விட பெரியது இந்த பூம்புகார் நகரம் என்கிறான் .

கப்பல் கட்டும் தொழிலிலே தேர்ச்சி பெற்றவன் தமிழன் நாம் தமிழர்கள் ..............

@டப்பா தலையன்


இப்படி ஒரு கூட்டம் எல்லா கல்லூரிகளிலும் நிச்சயம் இருந்திருக்கும்..

இப்படி ஒரு கூட்டம் எல்லா கல்லூரிகளிலும் நிச்சயம் இருந்திருக்கும்..

1.நூலகத்தின் நுழைவு வாயிலில் கால் கடுக்க காத்திருப்பாரகள் . ஆனால் கல்லூரி காலம் முழுக்க ஓர் நாள் கூட நூலகத்தின் உள்ளே நுழைந்திருக்க மாட்டார்கள்.

2.வகுப்பிற்கு ஓர் நாள் கூட நேரத்திற்கு வந்திருக்க மாட்டார்கள். உணவகத்திற்கு ஓர் நாள் கூட வராமல் இருந்திருக்க மாட்டார்கள்

3.முதல் வருடத்தில் மட்டுமே பையில் பேனாவும் , கையில் கையேடுமாய் கல்லூரிக்கு வந்திருப்பார்கள். அதன் பின் கடன் வாங்கிய பேனாவில் தான் தேர்வைக் கூட எழுதியிருப்பார்கள்.

4.பெண்களிடம் பேசியிருக்கவே மாட்டார்கள். பெண்களைப் பற்றி பேசாமல் இருந்திருக்கவே மாட்டார்கள்.

5.அமைதியான பெண்ணாய் பார்த்து அவள் அசந்த நேரம் டிபன் பாக்ஸில் இருக்கும் உணவை காலி செய்திருப்பார்கள்.

6.மதிய நேர வகுப்பில் மிகுந்த சோர்வான நேரத்தில் நேரம் கழியவில்லை என்று ,ஒரு படிப்பாளியை எழுப்பி வாத்தியாரிடம் கேள்வி கேட்க சொல்லியிருப்பார்கள்.

7.நான்கு பேர் படுக்கும் கட்டிலில், பத்து பேரை உறங்கச் சொன்னால் கூட ஒற்றுமையாய் உறங்கியிருப்பார்கள் பொய்யை கூட ஒன்றாய் ஒரே மாதிரி சொல்லியிருப்பார்கள்.

8.எதற்குமே அசையாதவர்கள், ஏதோ ஒரு பெண்ணின் பேச்சால் சண்டை போட்டிருப்பார்கள்.

9.படிக்கறவனை விட்டு தள்ளியே இருப்பார்கள்.ஆனால் தேர்வின் முதல் நாள் இரவில் மட்டுமே முழு புத்தகத்தையும் படித்து தேர்ச்சி அடையும் அளவிற்கு திறமையானவர்களாய் இருப்பார்கள்.

10.பிறந்தநாள் விழா, நண்பர்கள் தினம் என அத்தனையும் வகுப்பில் கொண்டாடி ஒட்டு மொத்த வகுப்பிற்கும் தண்டனை வாங்கி தந்திருப்பார்கள்.

11.விடுதி உணவகத்தில் சாப்பாடு சரியில்லை அதனால் வேலை நிறுத்தம் செய்கிறோம் என்று சும்மா நின்ற பேருந்து கண்ணாடியை உடைத்திருப்பர்கள்.அதற்கும் நஷ்ட ஈடு என்று, வகுப்பில் இருக்கும் எல்லோரிடமும் கல்லூரி நிர்வாகம் ஒரு தொகையை கறந்திருக்கும்.

# அழகிய நினைவுகள் தொடர்ந்து மலரும்.

தமிழா நீ ஒரு சகாப்தம்




தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலத்தைப் படைத்தவர்கள் ராஜராஜசோழனும் அவன் மகன் ராஜேந்திரசோழனும் ஆவார்கள். இவர்கள் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழ ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக ஆக்கினார்கள். கி.பி. 982-ம் ஆண்டில், ஐந்தாம் மகிந்தன் என்ற சிங்கள அரசன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன், சோழர்களுக்கு எதிரிகளான பாண்டியனுக்கும், சேரனுக்கும் உதவி செய்து வந்தான்.

படையெடுப்பு

எனவே, இலங்கை மீது படையெடுக்க சோழமன் னன் ராஜராஜசோழன் முடிவு செய்தார். தன் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில் ஒருபெரிய கப்பல் படையை அனுப்பி வைத்தார்.

தமிழ்ப் போர் வீரர்களுடன் கப்பல்கள் இலங்கையை சென்றடைந்தன. போர்க் கப்பல்களைப் பார்த்து சிங்களர்கள் மிரண்டனர். சோழர் படையை எதிர்க்க துணிவின்றி, மன்னன் மகிந்தன் இலங்கையின் இன்னொரு பகுதியான ரோகண நாட்டிற்கு தப்பி ஓடி விட்டான். சோழர் படை, இலங்கையின் வடபகுதியை கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பகுதிக்கு `மும்முடிச் சோழ மண்டலம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. தலைநகரமான அனுராதபுரம் அழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பொலனறுவா நகரம் புதிய தலைநகரம் ஆக்கப்பட்டது. அதற்கு `சனநாதமங்கலம்' என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

சிங்கள மன்னனின் கருவூலத்தில் இருந்த நகைகள், வைர மாலைகள், அரசஅணிகலன்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன. உடைக்க முடியாத வாள் ஒன்று சோழர் வசமாகியது. இரண்டாவது படையெடுப்பு ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிய மகிந்தன், சும்மா இருக்கவில்லை. சோழருக்கு எதிராக பெரும்படை ஒன்றை திரட்டினான். இலங்கையில் சோழர்கள் கைப்பற்றிய பகுதியை மீட்க போர் தொடுத்தான்.

இதுபற்றி சோழ மன்னன் ராஜேந்திரனுக்குத் தெரிந்தது. அவன் கி.பி. 1017-ம் ஆண்டில் மீண்டும் இலங்கை மீது படையெடுத்தான். இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது. சோழ படைகளின் தாக்குதலை, மகிந்தன் படைகளால் சமாளிக்க முடியவில்லை. போரில் சோழர் படை வென்றது. சிங்களர் படை தோற்றது. மகிந்தனின் மணிமுடியும், அரசியின் மகுடமும் ராஜேந்திர னின் வசம் ஆகியது. அதுமட்டுமின்றி, 100 ஆண்டுகளுக்கு முன்னதாக, சிங்கள அரசனிடம் பாண்டிய மன்னன் பாதுகாப்பாக கொடுத்து வைத்திருந்த மணிமகுடத்தையும் ராஜேந்திர சோழன் கைப்பற்றினான்.

சிறையில் மகிந்தன்

போரில் தோற்றுப்போன மகிந்தன், சோழ வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு ராஜேந்திர சோழன் முன்பாக நிறுத்தப்பட்டான். ராஜேந்திரசோழன் தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது, மகிந்தனும் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சோழநாட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 12 ஆண்டு காலம் சிறையில் இருந்த மகிந்தன், சிறையிலேயே இறந்து போனான். மேற்கண்ட தகவல்கள், திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ராஜேந்திர சோழன் வெற்றியை குறிக்கும் கல்வெட்டு ஒன்று, கொழும்பு நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்னும் உள்ளது. மகிந்தனை ராஜேந்திரசோழன் முறியடித்தது பற்றி, சிங்களர்களின் வரலாற்று நூலான "சூளவம்ச''த்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்தனின் மகன்

ராஜேந்திர சோழனால் சிறை பிடிக்கப்பட்ட மகிந்தனுக்கு, காசிபன் என்ற மகன் இருந்தான். போர் நடந்தபோது அவனுக்கு வயது 12. அவனை சிங்களர்கள் ரகசியமாக வளர்த்து வந்தனர். சோழ நாட்டு சிறையில் மகிந்தன் இறந்த பிறகு, காசிபனை தங்கள் மன்னனாக சிங்களர்கள் அறிவித்தனர். சோழர்களை எதிர்க்க அவன் பெரும் படை திரட்டினான்.

இதை அறிந்த ராஜேந்திர சோழன், தன் மகன் இராசாதிராஜன் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். கி.பி.1041-ல் நடைபெற்ற இந்தப் போரில் காசிபன் மாண்டான். சிங்களப்படை தோற்றுப்போய், சிதறி ஓடிற்று. அதன்பின், கீர்த்தி என்ற சிங்கள மன்னன் சோழர்களுடன் போர் புரிந்து தோற்றுப் போனான். அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

பராக்கிரமபாண்டியன்

பிற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர்.

கி.பி. 1255-ம் ஆண்டு பட்டத்திற்கு வந்த ஜடாவர்மன் வீரபாண்டியன், இலங்கை மீது படையெடுத்து வெற்றி கண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பல முறை வென்றதாக கல் வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

பிற்காலத்தில், விஜயநகர அரசர்களும் இலங்கையில் போரிட்டு சிங்களரை வெற்றி கொண்டுள்ளனர்.
நன்றி:‍ தினத்தந்தி

சிதம்பர ரகசியம்


# சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம் #

கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் .... இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..பல வற்றை அறிய விஞானம் -ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ... அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. (If you google cosmic dance of natarajar it would lead you to so many research articles..inline with that International Research Centre , CERN, have installed a NATARAJAR statue in their premises- for more details can check fritjofcapra.net/shiva.html )

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..


கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..

1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர்.

9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

-ஆதிரா

Visit our Page -► தமிழால் இணைவோம்
L

பொதிகை மலையும் ஜப்பானும்


பொதிகை மலையும் ஜப்பானும்:-

தலைப்ப கேட்டவுடனே குழப்பம் வருமே, எனக்கும் அப்படி தான் இருந்திச்சி. பொதிகை திருநெல்வேலி பக்கம் இருக்கு, ஜப்பான் எங்கையோ இருக்கு, கப்பலும் கிடையாது, விமான சேவையும் கிடையாது அப்புறம் எதுக்கு இப்படி லிங்க் பண்றாங்கன்னு யோசிச்சிட்டே படிச்சேன் ரெண்டு வருஷம் முன்னாடி உள்ள தினத்தந்தி மாவட்ட சிறப்புகள் பகுதியை, அப்படியே ஷாக் ஆகிட்டேன், நீங்களும் பாருங்க ஷாக் ஆகி ஷேர் பட்டன் கிளிக் பண்ணுவிங்க.

பொதிகை மலைக்கு நிறைய சிறப்பு இருக்கு சொல்லனும்ன்னு நெனைச்சா விடிய விடிய சொல்லலாம், அதுல பெரிய போக்கிஷம்ன்னு பாத்தா ஒன்னு தமிழ் மொழி, ரெண்டாவது அங்க இருக்குற மூலிகை செடிகள், உலகிலேயே எங்கும் கிடைக்காத அரியவகை மூலிகைகள் பொதிகை மலையில் கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்.

அதே மாதிரி ஜப்பான் மேல அமெரிக்கா விசிய அணுகுண்டு நமக்கு தெரியும். ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இரண்டு நகரமும் அழிந்த நிலையில் தான் இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்தது . இன்னும் 200 ஆண்டுக்கு ஜப்பான் மக்களால் அங்கு வாழ முடியாது, காரணம் காற்றில் நச்சு தன்மை இருபதாக கூறினார்கள் அவர்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும் என்று அப்போது இருந்த விஞ்ஞானம் கூறியது, அனால் இப்போது இருக்கும் ஜப்பானை பாருங்கள், மக்கள் எப்போதும் இருபது போல் வாழ்கிறார்கள் முன்னேறுகிறார்கள், இப்போது ஆராய்ந்து பார்த்தல் காற்றில் நச்சு தன்மை இல்லை, அது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் குதித்தனர், அராய்ச்சி முடிவில் தெரிந்த அதிசய உண்மை தான் இது.

ஜப்பானியர்கள் நம் இந்தியர்களை விட சற்று வழிமையானவ்ர்கள் மற்றும் புத்திசாலிகள் ஆனது காரணமே நம் பொதிகை மலையும், அதன் மருத்துவ குணமும் தான் என்று ஆராய்ச்சி முடிவில் கூறினார்கள். தென் மேற்கு பருவகாற்று விசும் போது காற்று பொதிகை மலையை கடக்கும் போது பொதிகை மலையில் இருக்கும் மரங்களின் முலிகை பொருள்கள் காற்றில் கலக்கிறதாம், அந்த காற்று பல மைல்கள் தூரம் உள்ள ஜப்பான் கடக்கும் போது அந்த முலிகை காற்று மழையாய் பொழிக்கிறது. அப்படியே ஷாக் ஆகிடிங்கலா??? சிக்கிரமா லைக் பண்ணிட்டு ஷேர் பண்ணிட்டு போங்க, நாளைக்கு வரேன்... டாட்டா...

அ.பொன் மா கிசன்

வேட்டுவன் கோவில்,


7 - 8ஆம் நூற்றாண்டு, வேட்டுவன் கோவில், - கழுகுமலை,தூத்துக்குடி மாவட்டம்,தமிழகம், இந்தியா.

இந்த கோவில் ஒரு பாறையில் செதுக்க பட்டது. இன்று இருக்கும் diamond cutting கருவிகள் வைத்து கூட செதுக்க முடியாத வடிவமைப்புகள் அப்போதே தமிழன் செதுக்கி விட்டான்.

இது இப்போது உலகில் இருக்கும் அணைத்து விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எப்படி செதுக்கினார்கள் தமிழர்கள் என்று வியந்து போய் உள்ளனர்.

அறிவு திறன் உள்ளவர்


அடேங்கப்பா நம் தமிழர்கள் இவ்வளவு அறிவு திறன் உள்ளவர்களா???

வியந்து நின்றான் இன்று நெல்லை அப்பர் கோவில் சிலையை கண்டவுடன்,

இந்த பதிவு ஹிந்துக்களுக்கு மட்டும் அல்ல, இது தமிழர்களுக்கு, மதத்தை பார்க்காமல் கலையை பார்த்து பதிவு செய்கிறேன் நான்.
முழுவதையும் படித்து பகிருங்கள் உங்கள் நண்பர்களிடம்,

இங்கு இருக்கும் சிற்பம் நெல்லை அப்பர் கோவில் உள்ளது, அது யார்? அதன் வரலாறு என்ன? என்பது எல்லாம் எனக்கு தெரியாது, ஆனால் பார்த்து பிரமித்து நின்று தொட்டு பார்த்தேன் அந்த சிலைகளை.

நம்மகிட்ட ஒரு பென்சில் பேப்பர் குடத்து ஒருத்தர் வரைய சொன்ன என்ன செய்வோம்? அவர்கள் கண்,மூக்கு,வாய்,கை,கால் ஒரு தோராயமாக வரைவோம். ஆனால் அவர்களை சிலையாக செதுக்க சொன்னால் கண்டிப்பா வரைஞ்சத்தவிட கேவலமா செதுக்குவோம் சிலரை தவிர.....

இங்க முதலில் நடுல இருக்குற சிற்ப்பத்தை பாருங்க? அப்படியே மனிதன் முகம், கண்,மூக்கு,வாய்,மீசை எல்லாம் அப்படியே இருக்கும், எப்பா இது தான் எல்லா கோவிலிலும் இருக்குமேன்னு கிஷன் திட்டுவிங்க, அப்படியே லைட்டா மார்ப்புக்கு கீழ பாருங்க? சின்னதா கோடு கோடா தெரியுதா தெரியலனா முதல் படத்தை மார்ப்புக்கு கீழே பாருங்கள், அது என்னனு தெரியுதா? தெரியலய அந்த சிற்பம் மாதிரியே நின்னு பாத்தா தெரியும் அது நாம் நெஞ்சு எலும்புன்னு, என்ன ஆச்சரியம் பாருங்க அந்த காலத்துல கல்லுல எப்படி செத்துக்கி இருக்காங்கன்னு, அது மட்டுமா படத்தில் இருக்குற அம்பு குறி இட்ட இடத்தில உற்று பாருங்கள், முன்றாம் படம் கால் பகுதில் எடுக்கப்பட்டது, நம்ம கால அந்த மாதிரி வச்சி பாருங்க, அப்போம் அந்த சிற்ப்பதில் இருக்குற மாதிரி தான் நரம்பு தெரியும், அந்த காலத்தில நரம்பு தெரியுற மாதிரி சிற்பமே செதுக்கி இருக்கிறார்கள் தமிழர்கள்? அப்படினா மருத்துவத்தில் எப்படி இருந்தது இருப்பாங்கன்னு நீங்களே யோசிச்சி பாருங்க.....

சில பக்கிங்க இதையும் குற சொல்லும், தயவு செஞ்சி திருநெல்வேலி நெல்லை அப்பர் கோவில் போய் பாருங்க உண்மை தெரியும். என்றும் தமிழ் வரலாற்று மற்றும் கலாசாரத்திருக்காக கிஷன்.....

அ.பொன் மா கிசன்