Friday, March 22, 2013

இலங்கையில் நடந்தது இனப்படு கொலை’

இதுவரை ஆறுமுறை டெல்லி காங்கிரஸை மிரட்டினார் கருணாநிதி. ஆனால், அத்தனை தடவையும் அதனை வாபஸ் வாங்கினார். இப்போதும் அப்படி நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், ஈழத் தமிழர் விவகாரத்தை வைத்து கருணாநிதி ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டதையே உணர்த்துகிறது ராஜினாமா அறிவிப்பு.



'இலங்கையில் நடந்தது இனப்படு கொலை’ என்பதை ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத் தில் இந்தியா சேர்க்க வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் கோரிக்கை. இதனை அவர் ஒரு மாதத்துக்கு முன்பு சொல்லி இருக்க லாம். இந்தியாவுக்கும் அமெரிக்கா வுக்கும் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையாவது நடக்க நேரம் இருந்திருக்கும். 21-ம் தேதி ஓட்டெடுப்புக்கு வரவேண்டிய தீர்மானத்துக்கு 18-ம் தேதி இறுதி வடிவம் கொடுப்பார்கள். 17-ம் தேதி செக் வைக்கிறார் கருணாநிதி.

ஐ.நா.விதிமுறைகளை அறிந்துகொள்வதற்கான அவகாசம் இல்லாமல், டெல்லியில் இருந்து ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகிய மூவரும் 18-ம் தேதி சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்தார் கள்.'அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும், இதே வாசகங்கள் கொண்ட தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் வைத்து நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரிக்கைகளில் ஒன்றைக் கூட்டி னார். 'பதிலை நாங்கள் சொல்ல முடியாது. சோனியாவிடம் கேட்டு விட்டுச் சொல்கிறோம்’ என்று மூவரும் சென்றார்கள். மறுநாள் காலையில், கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவதாக கருணாநிதி அறிவித்தார்.

மூவர் குழு, டெல்லி போனது மட்டுமே உண்மை. அவர்கள் சோனியா, மன்மோகனிடம் இதுபற்றிப் பேசினார்களா என்றே தெரிய வராத நிலையில், 'நாங்கள் விலகுகிறோம்’ என்று கருணாநிதி அறிவித்திருப்பது 'காங்கிரஸ் என்ன முடிவு எடுத்தாலும் அவர்களோடு இருக்க வேண்டாம்’ என்று முடிவெடுத்ததையே காட்டுகிறது.

எப்படியாவது காங்கிரஸ் கட்சியைத் தலைமுழுகத் திட்டமிட்டு, அதற்கான ஒரு காரணத்தைத் தேடி, அது ஈழப் பிரச்னையாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். நாடு முழுவதும் எழுந்துள்ள காங்கிரஸ் எதிர்ப்பு மனோபாவம்தான் கருணாநிதியின் இந்த முடிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன் பேராசிரியர் அன்பழகனுடன் பேசிய கருணாநிதி, ''காங்கிரஸோடு சேர்ந்து இனி ஓட்டுக் கேட்கப் போக முடியாது'' என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகே, மத்திய ஆட்சிக்கான நிர்பந்தங்களையும் தொடங்கி இருக்கிறார். ஆனால், அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் காங்கிரஸ் மட்டும்தான். இன்று அவரே கழற்றிவிட்ட நிலையில், அவரோடு எந்தக் கட்சி கூட்டணியில் இணையத் தயாராக இருக்கும் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது.

காங்கிரஸ், தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் இருக்கும் கூட்டணியில் இணைந்தால் நல்லது என்று விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்பு யோசிக்கத் தொடங்கினார். ஆனால், இன்று அவர்களே பிரிந்த நிலையில் சேர ஆர்வம் காட்ட மாட்டார். காங்கிரஸுக்கு இணையாக மாணவர்கள் மத்தியில் தி.மு.க. மீதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினாலும், கருணாநிதி மீதான கோபம் குறையவும் வாய்ப்பு இல்லை. தனக்கு லாபம் வர வாய்ப்பு இல்லாத ஒரு முடிவையே கருணாநிதி இப்போது எடுத்துள்ளார்.

இந்த நெருக்கடியைச் சமாளிப்பதில்தான் தி.மு.க-வின் அரசியல் எதிர்காலமே அடங்கி உள்ளது!

- முகுந்த்
இதுவரை ஆறுமுறை டெல்லி காங்கிரஸை மிரட்டினார் கருணாநிதி. ஆனால், அத்தனை தடவையும் அதனை வாபஸ் வாங்கினார். இப்போதும் அப்படி நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், ஈழத் தமிழர் விவகாரத்தை வைத்து கருணாநிதி ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டதையே உணர்த்துகிறது ராஜினாமா அறிவிப்பு.

 

'இலங்கையில் நடந்தது இனப்படு கொலை’ என்பதை ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத் தில் இந்தியா சேர்க்க வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் கோரிக்கை. இதனை அவர் ஒரு மாதத்துக்கு முன்பு சொல்லி இருக்க லாம். இந்தியாவுக்கும் அமெரிக்கா வுக்கும் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையாவது நடக்க நேரம் இருந்திருக்கும். 21-ம் தேதி ஓட்டெடுப்புக்கு வரவேண்டிய தீர்மானத்துக்கு 18-ம் தேதி இறுதி வடிவம் கொடுப்பார்கள். 17-ம் தேதி செக் வைக்கிறார் கருணாநிதி.

ஐ.நா.விதிமுறைகளை அறிந்துகொள்வதற்கான அவகாசம் இல்லாமல், டெல்லியில் இருந்து ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகிய மூவரும் 18-ம் தேதி சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்தார் கள்.'அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும், இதே வாசகங்கள் கொண்ட தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் வைத்து நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரிக்கைகளில் ஒன்றைக் கூட்டி னார். 'பதிலை நாங்கள் சொல்ல முடியாது. சோனியாவிடம் கேட்டு விட்டுச் சொல்கிறோம்’ என்று மூவரும் சென்றார்கள். மறுநாள் காலையில், கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவதாக கருணாநிதி அறிவித்தார்.

மூவர் குழு, டெல்லி போனது மட்டுமே உண்மை. அவர்கள் சோனியா, மன்மோகனிடம் இதுபற்றிப் பேசினார்களா என்றே தெரிய வராத நிலையில், 'நாங்கள் விலகுகிறோம்’ என்று கருணாநிதி அறிவித்திருப்பது 'காங்கிரஸ் என்ன முடிவு எடுத்தாலும் அவர்களோடு இருக்க வேண்டாம்’ என்று முடிவெடுத்ததையே காட்டுகிறது.

எப்படியாவது காங்கிரஸ் கட்சியைத் தலைமுழுகத் திட்டமிட்டு, அதற்கான ஒரு காரணத்தைத் தேடி, அது ஈழப் பிரச்னையாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். நாடு முழுவதும் எழுந்துள்ள காங்கிரஸ் எதிர்ப்பு மனோபாவம்தான் கருணாநிதியின் இந்த முடிவுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன் பேராசிரியர் அன்பழகனுடன் பேசிய கருணாநிதி, ''காங்கிரஸோடு சேர்ந்து இனி ஓட்டுக் கேட்கப் போக முடியாது'' என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகே, மத்திய ஆட்சிக்கான நிர்பந்தங்களையும் தொடங்கி இருக்கிறார். ஆனால், அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் காங்கிரஸ் மட்டும்தான். இன்று அவரே கழற்றிவிட்ட நிலையில், அவரோடு எந்தக் கட்சி கூட்டணியில் இணையத் தயாராக இருக்கும் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது.

காங்கிரஸ், தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் இருக்கும் கூட்டணியில் இணைந்தால் நல்லது என்று விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்பு யோசிக்கத் தொடங்கினார். ஆனால், இன்று அவர்களே பிரிந்த நிலையில் சேர ஆர்வம் காட்ட மாட்டார். காங்கிரஸுக்கு இணையாக மாணவர்கள் மத்தியில் தி.மு.க. மீதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினாலும், கருணாநிதி மீதான கோபம் குறையவும் வாய்ப்பு இல்லை. தனக்கு லாபம் வர வாய்ப்பு இல்லாத ஒரு முடிவையே கருணாநிதி இப்போது எடுத்துள்ளார்.

இந்த நெருக்கடியைச் சமாளிப்பதில்தான் தி.மு.க-வின் அரசியல் எதிர்காலமே அடங்கி உள்ளது!

- முகுந்த்

பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா

பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா

பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா! தமிழர்களிற்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!!

உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை.

ஆர்ஜென்ரீனா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்தில் ஓர்நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலரிற்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை.

அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பாரத்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பேருமகிழ்வடைந்துள்ளார். அந்தக்காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார்.

இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சை குத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்று புகழ்ந்தார் அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை சந்தோஷத்தில் கட்டி அணைத்தேன் என்றார்

புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.

பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகர னை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.

தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார்

எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழி முறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத் திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும்
பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன் - மரடோனா

பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா! தமிழர்களிற்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!!

உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக் கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை.

ஆர்ஜென்ரீனா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்தில் ஓர்நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலரிற்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை.

அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பாரத்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பேருமகிழ்வடைந்துள்ளார். அந்தக்காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார்.

இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சை குத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்று புகழ்ந்தார் அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை சந்தோஷத்தில் கட்டி அணைத்தேன் என்றார்

புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.

பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகர னை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.

தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார்

எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழி முறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத் திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும்

உலக தண்ணீர் தினத்தன்று மிக

உலக தண்ணீர் தினத்தன்று மிக எளிமையான வாட்டர் ஃப்யூரிஃபையர் குறித்த தகவல்...


சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.
மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.
தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது!


உலக தண்ணீர் தினத்தன்று மிக எளிமையான வாட்டர் ஃப்யூரிஃபையர் குறித்த தகவல்...


சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.
மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.
தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது!

Source :Vikatan
▬▬▬▬•http://osmeb.blogspot.in/ •▬▬▬▬

மத்திய அரசுக்கு மாணவர் கூட்டமைப்பு.

ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடுவோம் மத்திய அரசுக்கு மாணவர் கூட்டமைப்பு.

இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31ஆம் தேதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும்தமிழீழ விடுதலைக்கான மாணவ கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

'எங்கள் கோரி்க்கைகள் எதுவுமே சாத்தியம் இல்லாதவை அல்ல. நிறைவேற்ற முடியாதவையும் அல்ல. இன அழிப்பு, போர்க் குற்றம், சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை ஆகிவற்றை கொண்டுவரும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டிருந்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் அதனால் இந்தத் தீர்மானங்களைக் கொண்டு வந்திருக்க முடியும்.

மாபெரும் எங்கள் போராட்டத்தை அற்பப் புழுவைப்போல மத்திய அரசு நினைத்துவிட்டது. முள்ளிவாய்க்காலுக்கு முன் பல வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றியதுபோல இப்போதும் ஏமாற்றிவிட்டது. தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. இந்திய அரசை ஒதுபோதும் மன்னிக்க முடியாது.

எட்டு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசுக்கு நாங்கள ஏன் மதிப்பளிக்க வேண்டும். உங்களுக்கு இனியும் நாங்கள ஒத்துழைக்கப்போவது இல்லை.

இந்திய விடுதலைப் போரில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக ஒத்துழைக்க முடியாது என்று காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தைப்போல, ஒரு தீவிர இயக்கம் தொடங்க வேண்டிய கட்டாயத்தை மத்திய அரசு ஏற்படுத்திவிட்டது.

இனி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய எந்த வரியையும் செலுத்த வேண்டும். எந்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டாம். செலுத்தவும் கூடாது என்பதை வலியுறுத்தி மக்களிடம் பிரசாரம் செய்ய இருக்கிறோம். ஊடகங்களும் எங்கள் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தப் போராட்டம் தொடர் போராட்டமாக முன்னேறும். இதில் மாணவர்களின் ஒற்றுமைதான் மையம். ஈழத் தமிழ் மக்களுக்கு தாயக அதிகாரம் பெற்றுத் தரும் வரையில் மாணவர் போராட்டம் தொடரும்.

மத்திய அரசின் பிரதிநிதிகள் வரும் 31ஆம் தேதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தவறினால் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் தெரிவித்தனர்.

ராஜபக்சேவை தூக்கிலிடு!

ராஜபக்சேவை தூக்கிலிடு!

பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்!

மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை.

சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது.
ராஜபக்சேவை தூக்கிலிடு! 

பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்! 

மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை.

சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது.

ஈரோடு அணைத்து

ஈரோடு அணைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் . தனி தமிழ் ஈழம் கேட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்தோம் அண்ணா. எங்களை கைது செய்து விட்டு மாலை விட்டு விட்டார்கள் அண்ணா .
ஈரோடு அணைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் . தனி தமிழ் ஈழம் கேட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்தோம் அண்ணா. எங்களை கைது செய்து விட்டு மாலை விட்டு விட்டார்கள் அண்ணா .

THE POWER OF STUDENTS

தமிழ் என் தாய்மொழி


THE POWER OF STUDENTS :- Must Share !!!!
தலைக்கு 500ரூபா யாரும்
கொடுக்கவில்லை.. ­....!!!!!
பிரியாணி பொட்டலம்
கொடுக்கவில்லை.. ­....!!!!!
கோட்டார் ( மது ) பாட்டில்
கொடுக்கவில்லை ......!!!!!
வேன் பஸ் என எதுவும் அனுப்பி ஆள்
பிடிக்கவில்லை ......!!!!!
கோடி கோடியா நிதி திரட்டவில்லை கடை கடையா வசூல்
செய்யவில்லை ......!!!!!
மாவட்டம் வட்டம் கிளை என்று யாரும்
உத்தரவு போடவில்லை ......!!!!!
அப்பரம் எப்படி இந்த போராட்டத்துக்கு
மட்டும் இவ்வளவு கூட்டம் கூடுது.....????
தமிழ் நாட்டு கழகங்கள்
புலம்பல்....... ­ ....!!!!!
@[578401832173683:274:தமிழ் என் தாய்மொழி]


THE POWER OF STUDENTS :- Must Share !!!!
தலைக்கு 500ரூபா யாரும்
கொடுக்கவில்லை.. ­....!!!!!
பிரியாணி பொட்டலம்
கொடுக்கவில்லை.. ­....!!!!!
கோட்டார் ( மது ) பாட்டில்
கொடுக்கவில்லை ......!!!!!
வேன் பஸ் என எதுவும் அனுப்பி ஆள்
பிடிக்கவில்லை ......!!!!!
கோடி கோடியா நிதி திரட்டவில்லை கடை கடையா வசூல்
செய்யவில்லை ......!!!!!
மாவட்டம் வட்டம் கிளை என்று யாரும்
உத்தரவு போடவில்லை ......!!!!!
அப்பரம் எப்படி இந்த போராட்டத்துக்கு
மட்டும் இவ்வளவு கூட்டம் கூடுது.....????
தமிழ் நாட்டு கழகங்கள்
புலம்பல்....... ­ ....!!!!!

Bastard அத்வானி தெரிவித்த கருத்து.....

ஐநா வில் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக அத்வானி தெரிவித்த கருத்து.....

இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் வாரிசுகள். அங்குள்ள தமிழர்கள் ராவண படையை சேர்ந்தவர்கள். சிங்களமும், தமிழும் சமஸ்கிருதத்தின் குழந்தைகள். இந்தியா இலங்கையை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.........

# இனி காங்கிரசுடனோ , பி ஜே பி உடனோ மத்தியில் கூட்டணி வைத்து இங்கு உள்ள தமிழக கட்சிகள் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பால அடிக்கணும் .,


தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு




ஏமாற்றம் தரும் அமெரிக்க திர்மானம். இதை ஆதரிக்க, இத்தனை நாள் நாடகம் ஆடி இருக்க வேண்டாம் பிரதமர் மன்மோகன்சிங்கும், மன்மோகன் பின்னால் இருக்கும் இத்தாலியம்மாவும், இதை தீர்மானம் என கூறுவதை விட, அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சி என்று கூறலாம், இத்தீர்மாணத்தால் தமிழர்களுக்கு எவ்வித பயனும் இல்லை.

தமிழா......: சுதந்திர இந்தியா உருவான பிறகு கலவரத்தை அடக்க ராணுவம் வந்த பெருமை தமிழ்நாடு மட்டும் தான் (காஷ்மீர் தவிர்த்து) அன்று மொழி போர் (1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம்), இன்று இன போர், தமிழா ஒன்று "தமிழ் ஈழம் அல்லது தமிழ் தனி நாடு", ஒன்று பெறுவோம் "தமிழன் என்றும் முதலவன் என்போம்", ஓங்குக தமிழ் அற போர்., சுய ஆட்சி, மறைந்து, தனி தமிழ் நாடு போராட்டம் வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை, ஈழம் உருவானால், தமிழ் நாடு என்றும் அமைதி பூங்கா, அவ்வாறு இருக்க தமிழர் ஆசைபடுகிறோம்,

எங்கள் மாணவர்கள் இன்று அற போராளியாக, அவர்கள் ஆயுத போராளியாக மாறும் முன் நன்மை நடக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன், உலகை ஒரு குடை கீழ் ஆண்ட இனமடா நம் தமிழ், நாங்கள் அமைதி காக்கிறோம், சீண்டாதே, சாது மிரண்டால் காடு கொள்ளாது...

மத்திய அரசே, உன் நாடகத்தை நிறுத்து, வேண்டாம் இரட்டை வேடம், சிங்களன் உன் உறவினனா? இல்லை தமிழன் உன் நாட்டவன என்பதை முடிவு செய், கொலையாளி ராஜபக்சேவை கூண்டில் நிறுத்து, தமிழ் ஈழம் மலர செய், வாஜ்பாய் ஆட்சியில் சிங்களனை அடக்கி போரை நிறுத்தி தமிழனை வாழச் செய்தார், அவர் தமிழனின் சகோதரர், உன்னால் முடியவில்லை என்றால் ஆட்சி விட்டு வெளியேறு, நாங்கள் இருக்கிறோம் எங்கள் சகோதரகளுக்கு, உன் சாயம் வெழுத்து விட்டது.
ஐநா வில் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக அத்வானி தெரிவித்த கருத்து.....

இலங்கையில் சிங்களரை நாம் விட்டு கொடுக்க முடியாது. அவர்கள் ராமர் விட்டு வந்த அனுமன் படையின் வாரிசுகள். அங்குள்ள தமிழர்கள் ராவண படையை சேர்ந்தவர்கள். சிங்களமும், தமிழும் சமஸ்கிருதத்தின் குழந்தைகள். இந்தியா இலங்கையை முழுமையாக ஆதரிக்க வேண்டும்.........

# இனி காங்கிரசுடனோ , பி ஜே பி உடனோ மத்தியில் கூட்டணி வைத்து இங்கு உள்ள தமிழக கட்சிகள் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பால அடிக்கணும் .,


via - தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு




ஏமாற்றம் தரும் அமெரிக்க திர்மானம். இதை ஆதரிக்க, இத்தனை நாள் நாடகம் ஆடி இருக்க வேண்டாம் பிரதமர் மன்மோகன்சிங்கும், மன்மோகன் பின்னால் இருக்கும் இத்தாலியம்மாவும், இதை தீர்மானம் என கூறுவதை விட, அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சி என்று கூறலாம், இத்தீர்மாணத்தால் தமிழர்களுக்கு எவ்வித பயனும் இல்லை.

தமிழா......: சுதந்திர இந்தியா உருவான பிறகு கலவரத்தை அடக்க ராணுவம் வந்த பெருமை தமிழ்நாடு மட்டும் தான் (காஷ்மீர் தவிர்த்து) அன்று மொழி போர் (1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம்), இன்று இன போர், தமிழா ஒன்று "தமிழ் ஈழம் அல்லது தமிழ் தனி நாடு", ஒன்று பெறுவோம் "தமிழன் என்றும் முதலவன் என்போம்", ஓங்குக தமிழ் அற போர்., சுய ஆட்சி, மறைந்து, தனி தமிழ் நாடு போராட்டம் வெடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை, ஈழம் உருவானால், தமிழ் நாடு என்றும் அமைதி பூங்கா, அவ்வாறு இருக்க தமிழர் ஆசைபடுகிறோம்,

எங்கள் மாணவர்கள் இன்று அற போராளியாக, அவர்கள் ஆயுத போராளியாக மாறும் முன் நன்மை நடக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன், உலகை ஒரு குடை கீழ் ஆண்ட இனமடா நம் தமிழ், நாங்கள் அமைதி காக்கிறோம், சீண்டாதே, சாது மிரண்டால் காடு கொள்ளாது...

மத்திய அரசே, உன் நாடகத்தை நிறுத்து, வேண்டாம் இரட்டை வேடம், சிங்களன் உன் உறவினனா? இல்லை தமிழன் உன் நாட்டவன என்பதை முடிவு செய், கொலையாளி ராஜபக்சேவை கூண்டில் நிறுத்து, தமிழ் ஈழம் மலர செய், வாஜ்பாய் ஆட்சியில் சிங்களனை அடக்கி போரை நிறுத்தி தமிழனை வாழச் செய்தார், அவர் தமிழனின் சகோதரர், உன்னால் முடியவில்லை என்றால் ஆட்சி விட்டு வெளியேறு, நாங்கள் இருக்கிறோம் எங்கள் சகோதரகளுக்கு, உன் சாயம் வெழுத்து விட்டது.

Share it- Tamilan | www.twitter.com/tamilanworldwid | www.youtube.com/tamilanworldwide as much as possible

. முடிந்தால் போராட்டத்தில்

.
முடிந்தால் போராட்டத்தில்
கலந்து கொள்பவர்களுக்கு ஆதரவு தாருங்கள்

அடுத்த கட்ட போரட்டத்துக்கு தயாரான மாணவர்கள்
தயவுசெய்து share
பட்டனை அழுத்துங்கள் ..
முடிந்தால் போராட்டத்தில்
கலந்து கொள்பவர்களுக்கு ஆதரவு தாருங்கள் 

அடுத்த கட்ட போரட்டத்துக்கு தயாரான மாணவர்கள்

என் இளைய தலைமுறைகளே..

என் இளைய தலைமுறைகளே..
மனம் வலிக்கிறது
சில தங்கை, தம்பிகள் சினிமா மோகத்தில் இன்னும் ஆழ்ந்து இருப்பது மனம் வலிக்க செய்கிறது..
இத்தனை மாணவ செல்வங்கள் பட்டினி போராட்டம் நடத்தியும் நடிர்களின் இன்னும் ஒரு நாய் கூட பெரிதாக முன் வரவல்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்...
இன்னும் எங்கள் சுப்பர் ஸ்டார் என்று சொல்லி கொண்டு திரியும் மாணவ செல்வங்களே, உங்கள் ரஜினிகாந்த் அளித்த பேட்டியை பாருங்கள்....
[மும்பை குண்டுவெடிப்பில ் தொடர்புடையே நடிகர் சஞ்சய் தத்திற்கு, இன்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டதற ்கு ரஜினியின் கருத்து:
எனது அன்பான அருமையான நண்பருக்கு இந்தத் தீர்ப்பு கிடைத்ததை அறிந்து மிகவும் வருத்தப்பட்டேன் . அவரை மன்னித்து விடுதலை செய்ய பலர் போராடுவது நம்பிக்கையூட்டு கிறது. அவர் மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக செலவழிக்க கடவுளிடம் நான் பிராத்திக்கிறேன ்...]
கடந்த பல நாட்களாக மாணவருக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்க வில்லை, நேற்று வந்த தீர்ப்புக்காக வருத்தபடுகிறார் ..
எந்த விதத்தில் நியாயம்..
தமிழ் பேரை சொல்லி பிழைக்கும் நரிக்கூட்டத்தை கண்டு கொள்ளுங்கள்..
உங்களை படம் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை அவர்களின் மீது உள்ள மதிப்பை களைந்து விட்டு, நம் தமிழ் மொழி மீதும், நம் தமிழர் மீதும் மதிப்பு கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடதிர்கள ்..
என் இளைய தலைமுறைகளே..
மனம் வலிக்கிறது
சில தங்கை, தம்பிகள் சினிமா மோகத்தில் இன்னும் ஆழ்ந்து இருப்பது மனம் வலிக்க செய்கிறது..
இத்தனை மாணவ செல்வங்கள் பட்டினி போராட்டம் நடத்தியும் நடிர்களின் இன்னும் ஒரு நாய் கூட பெரிதாக முன் வரவல்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்...
இன்னும் எங்கள் சுப்பர் ஸ்டார் என்று சொல்லி கொண்டு திரியும் மாணவ செல்வங்களே, உங்கள் ரஜினிகாந்த் அளித்த பேட்டியை பாருங்கள்....
[மும்பை குண்டுவெடிப்பில ் தொடர்புடையே நடிகர் சஞ்சய் தத்திற்கு, இன்று 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டதற ்கு ரஜினியின் கருத்து:
எனது அன்பான அருமையான நண்பருக்கு இந்தத் தீர்ப்பு கிடைத்ததை அறிந்து மிகவும் வருத்தப்பட்டேன் . அவரை மன்னித்து விடுதலை செய்ய பலர் போராடுவது நம்பிக்கையூட்டு கிறது. அவர் மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக செலவழிக்க கடவுளிடம் நான் பிராத்திக்கிறேன ்...]
கடந்த பல நாட்களாக மாணவருக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்க வில்லை, நேற்று வந்த தீர்ப்புக்காக வருத்தபடுகிறார் ..
எந்த விதத்தில் நியாயம்..
தமிழ் பேரை சொல்லி பிழைக்கும் நரிக்கூட்டத்தை கண்டு கொள்ளுங்கள்..
உங்களை படம் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை அவர்களின் மீது உள்ள மதிப்பை களைந்து விட்டு, நம் தமிழ் மொழி மீதும், நம் தமிழர் மீதும் மதிப்பு கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடதிர்கள ்..

ராஜபக்சேவை தூக்கிலிடு!

ராஜபக்சேவை தூக்கிலிடு!
பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்!
மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை.
சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது.
ஆம் அனைவரும் குழந்தைகள். பாலச்சந்திரனிற் கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு' ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள் ' என முழக்கமிட்டனர்.
குழந்தைகள் ஒருங்கினைப்பாளர ் சிறுவன் 'தோழன் தமிழமுதன்' நம்மிடம் பேசியபோது,"எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காமஎங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவ ா இருக்கிறது?
நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம்' என்றார் உணர்வுப்பூர்வமா ய். அதன் பின் மீண்டும் முழக்கமிட தொடங்கினர்.
கைகளில் கருப்பு துணி கட்டி, கைகளை உயர்த்திகழுத்து நரம்பு புடைக்க முழங்கிய இந்த பிஞ்சுகளின் வீர மொழியை பார்க்கும்போது, இன பகைவர்கள் வீழ்ந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகிறது என்றனர்அங்கு கூடியிருந்த பொதுமக்கள்.
ராஜபக்சேவை தூக்கிலிடு!
பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்!
மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை.
சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது.
ஆம் அனைவரும் குழந்தைகள். பாலச்சந்திரனிற் கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு' ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள் ' என முழக்கமிட்டனர்.
குழந்தைகள் ஒருங்கினைப்பாளர ் சிறுவன் 'தோழன் தமிழமுதன்' நம்மிடம் பேசியபோது,"எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காமஎங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவ ா இருக்கிறது?
நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம்' என்றார் உணர்வுப்பூர்வமா ய். அதன் பின் மீண்டும் முழக்கமிட தொடங்கினர்.
கைகளில் கருப்பு துணி கட்டி, கைகளை உயர்த்திகழுத்து நரம்பு புடைக்க முழங்கிய இந்த பிஞ்சுகளின் வீர மொழியை பார்க்கும்போது, இன பகைவர்கள் வீழ்ந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகிறது என்றனர்அங்கு கூடியிருந்த பொதுமக்கள்.

Monday, March 11, 2013

ராகுல் நடத்திய டெசோ:மிஸ்டர் கழுகு

ராகுல் நடத்திய டெசோ:மிஸ்டர் கழுகு

ஈழப் பிரச்சினை காங்கிரஸ்காரர்களையும் நிம்மதி இல்லாமல் ஆக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை எதிர்க்கட்சிகள்தான் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தன. இப்போது கூட்டணிக் கட்சியான தி.மு.க-வும் டெசோவைப் புதுப்பித்து குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

மாநிலங்களவையிலும் மக்களவையிலும் தி.மு.க. தொடுக்கும் அஸ்திரங்களை காங்கிரஸ் மேலிடத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், ‘ஈழப் பிரச்சினையில் பார்வையாளராக காங்கிரஸ் இனியும் இருக்க முடியாது என்கிறார்கள் சிலர். இதை, ராகுல் காந்தியின் கவனத்துக்கும் கொண்டுபோனார்கள்.

தி.மு.க. நடத்தும் டெசோ கூட்டங்களில் காங்கிரஸும் கலந்துகொள்ள வேண்டும் என்பது இவர்களில் சிலரின் கோரிக்கை. 8-ம் தேதி அன்று டெல்லியில் டெசோ மாநாடு நடக்கும் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். எனவே, உடனடியாக முடிவெடுத்தாக வேண்டிய நெருக்கடி காங்கிரஸ்காரர்களுக்கு. கடந்த திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றம் முடிந்ததும், தமிழக எம்.பி-க்கள் அனைவரும் தன்னை வந்து சந்திக்குமாறு ராகுல் அழைப்பு விடுத்தார்.அகில இந்திய காங்கிரஸின் துணைத் தலைவராக ராகுல் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு என்பதால், அனைவரும் உற்சாகத்துடன் சென்றுள்ளனர்.

மிக சீரியஸாகப் பேசத் தொடங்கிய ராகுல்… இலங்கைத் தமிழர் விவகாரம், டெல்லியில் நடைபெறும் டெசோ கருத்தரங்கம் பற்றி கேட்டுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நம் நிலைப்பாட்டில் மாற்றம் வேண்டுமா?’ என்று அவர் கேட்டதும், தமிழக எம்.பி-க்கள் திகைத்துள்ளனர். ம்! சூழ்நிலையைப் புரிந்துகொண்ட மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தன்னுடைய கருத்துக்களைக் கவனமாக எடுத்துவைத்துள்ளார்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நாம் சரியான நிலைப்பாட்டைத்தான் எடுத்து வருகிறோம். அவர்களுக்கு ஏராளமான நன்மைகள் இந்தியாவில் இருந்து கிடைப்பதற்கு வழிசெய்துள்ளோம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் என்றாலே இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பம்தான் உள்ளது. நாம் செய்த நன்மைகள் எதுவும் மக்களிடம் போய்ச் சேரவில்லை. இதற்கு முக்கியக் காரணம், தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எப்போதும் இந்தப் பிரச்சினையை மையமாக வைத்தே அரசியல் செய்வதுதான்.

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அவர்கள் இந்த விவகாரத்தை இன்னும் பிரதானப்படுத்தி காய்களை நகர்த்துவார்கள். அதற்கு நாமும் ஈடுகொடுக்க வேண்டும். எனவே, நாம் அந்த விவகாரத்தில் ஒதுங்கி இருக்காமல், சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக, டெல்லியில் நடைபெறும் டெசோ மாநாட்டில் காங்கிரஸ் சார்பில் யாராவது கலந்துகொண்டால்கூட நல்லதுதான். அதற்கு நமக்கு அழைப்பிதழும் வந்துள்ளது.

அதை தி.மு.க. அமைச்சர் மு.க.அழகிரியே எடுத்து வந்து என்னை நேரில் சந்தித்துக் கொடுத்துள்ளார்’ என்ற ப.சிதம்பரம், கொஞ்சம் இடைவெளிவிட்டு…
‘நாங்கள் இப்படிச் சொல்வதால் ராஜீவ் காந்தியின் படுகொலையை மறந்துவிட்டோம் என்று அர்த்தம் அல்ல. அதற்குக் காரணமானவர்களை நாங்கள் எப்போதும் மன்னிக்கவே மாட்டோம்’ என்றும் சொல்லிவைத்தாராம்.

அமைதியாக இதைக் கேட்டுக்கொண்ட ராகுல், ‘அந்தக் கூட்டத்தில் யாரைக் கலந்துகொள்ள வைக்கலாம்?’ என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சிதம்பரம், ‘தமிழகத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் மீது இந்த விவகாரத்தில் எதிர்மறையான எண்ணம்தான் உள்ளது.

திடீரென்று போய் நாங்கள் டெசோ மேடையில் உட்காருவதும் நன்றாக இருக்காது. அதே சமயம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத் கலந்துகொள்வது பொருத்தமாக இருக்கும்.

அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நல்ல நட்பிலும் தொடர்பிலும் இருப்பவர்’ என்றும் ஆலோசனை வழங்கினாராம். சிதம்பரத்தின் பேச்சை கவனமாகக் கேட்ட ராகுல், ஓகே என்பதுபோல் தலையசைத்துவிட்டு, ‘இந்தத் தகவலை அம்மாவிடம் சொல்லி விடுங்கள்’ என்று சோனியாவுக்குத் தகவல் சொல்லச் சொன்னாராம்.

திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது…?

திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது…?

இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது.

இதே இந்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தியாகதீபம் திலீபன் அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது.

தனது கட்டுக்குள் அடங்க மறுத்த சிங்கள ஆட்சியாளர்களை அடிபணிய வைக்கும் நுழைவாயிலாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்ட இந்திய காங்கிரஸ் ஆட்சியாளாகளது கோர முகம் ஈழத் தமிழர்களுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது. சமாதானப் படை என்ற பொய் முகத்தோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்தியப் படைகள் மெல்ல, மெல்லத் தங்களது இலக்கினை நோக்கி நகர்ந்தார்கள். அந்த இலக்கினை அடைவதற்கு சிங்களம் கேட்ட விலை ஈழத் தமிழர்கள் மீதான தனது மேலாதிக்க அங்கீகாரம்.

அந்த வேளையில், இந்திய – இலங்கைக் கூட்டுச் சதிக்குள் தமிழீழம் சிக்கிக்கொண்டதை உணர்ந்துகொண்ட திலீபன், காந்தி தேசத்தை காந்தியின் பாதையில் சென்று அதன் துரோகங்களைத் தடுக்க முனைந்தார்.

* மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

* சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

* அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

* ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

* தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று நல்லூர் வீதியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

காந்தி தேசம் தனது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும். தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கும் என்ற திலீபனின் நம்பிக்கை பொய்த்துப் போனது. அன்றைய காங்கிரஸ் அரசால் 26 செப்ரம்பர் 1987 அன்று அவர் கொலை செய்யப்பட்டார். அவர் மெல்ல, மெல்லச் சாவினைத் தழுவுவதை அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

வரலாறு மன்னிக்க முடியாத அந்தத் தவறினை இழைத்த காங்கிரஸ் ஆட்சியாளர்களது கொடூரங்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. அது முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நீண்டே செல்கின்றது. ஒரு தமிழனின் அகிம்சைப் போர் தோற்கடிக்கப்பட்டதால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஒரு கால் நூற்றாண்டு கடந்த திலீபனது போராட்டத்தை இன்று லயோலா கல்லூரி மாணவர்கள் மீண்டும் கையேற்றிருக்கிறார்கள்.

இது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான தெளிவான செய்தி.

வைகோ அவர்கள் கூறியது போல், இது கந்தகக் கிடங்கில் வீழ்ந்துள்ள தீப்பொறி. அதனைக் கவனிக்கத் தவறினால், பின்னர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

இப்படி ஒரு தீப்பொறிதான் துனீசியாவின் அதிகார பீடத்தையே புரட்டிப் போட்டது. எகிப்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. லிபியாவின் சர்வாதிகாரம் நொருக்கப்பட்டது. சிரியாவில் இப்போதும் புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிகின்றது. இந்திய ஆட்சியாளர்களும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடவும் தவறினால் வரலாறு தீர்ப்பினைத் திருத்தி எழுதிவிடும்.

இந்தத் திலீபன்களது நியாயமான உணர்வினைப் புரிந்து கொள்ளாது, எங்கள் திலீபனைக் கொன்றது போல் நிலை மீண்டும் உருவானால், தமிழக மண்ணில் இனி திலீபன்கள் உருவாக மாட்டார்கள். பிரபாகரன்களே உருவாகுவார்கள். இதனை இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

புரட்சியாளர்கள் தாமாகவே உருவாவதில்லை. அவர்கள் நீதியற்ற ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் உருவாக்கப்படுகின்றார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் மீண்டும் திலீபன்கள் உருவாகிவிட்டார்கள். பிரபாகரன்கள் எப்போது? என்பதே வரலாற்றாளர்களின் கேள்வியாக உள்ளது.

- இசைப்பிரியா -

சீதாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!

சீதாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..?!

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:

சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:

சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்:

விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்:

சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:

சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

இதோ பின்வரும் கல்லூரிகளில் மாணவர் போராட்டங்கள் வெடித்துவிட்டன. அவையாவன :



ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைகல்லூரி மாணவர்கள் 11 பேர் தங்களது உண்ணா நிலை பட்டினி போராட்டத்தை துவங்கிவிட்டார்கள் !!!

வேலூரில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ள மாணவர்களிடம் Internal மார்க்கெல்லாம் போடனும் ஒன்றும் கிடைக்காது என்று காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்..

மருத்துவமனையில் உள்ள போராட்ட மாணவர்கள், போராட்டத்தை தொடர்ந்து நடத்துகிறார்கள், இதற்கிடையில் அவர்களை பார்க்க சென்ற யாரையும் காவல்துறை அனுமதிக்கவில்லை.

தமிழக மாணவர்களின் போராட்டத்தை தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விசயம்

லயோலா மாணவர்கள் மருத்துவமனையில் உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர். காவல் துறையிடமிருந்து கல்லூரி நிர்வாகத்திற்கு நிர்பந்தம்.

அரியலூர் அரசுக்கல்லூரி, தஞ்சை அரசுக்கல்லூரி, சென்னை கே.ஆர்.எம்.எம்., சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., திருச்சு தூய வளனார் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம். திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தொடர் உண்ணாவிரதம். லயோலா மாணவர்களின் கோரிக்கைகளை பின்பற்றி போராட்டம் தொடங்கப்பட்டு உள்ளது

ஈழ விடுதலைக்கான தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டம்.

இன்று பின்வரும் இடங்களில் மாணவர் போராட்டங்கள்
ஆக்ரோஷத்துடன் ஆரம்பம் ஆகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன..!
மாணவர் சக்தி மகத்தான சக்தி!

இதோ பின்வரும் கல்லூரிகளில் மாணவர் போராட்டங்கள் வெடித்துவிட்டன.
அவையாவன :

(1) மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள்
(2) காரைக்குடி அழகப்பா கல்லூரி..
(3) காரைக்குடி ஆனந்தா கல்லூரி..
(4) சென்னை லயோலா கல்லூரி 2000 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடங்கி விட்டனர்.
(5) கும்பகோணக் கல்லூரி ஒன்றில் இருந்து 2000 மாணவர்கள் போராட்டத்தை தொடங்கி விட்டனர்
(6) திருச்சி தூய வளனார் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள் காலவரையற்ற உண்ணா நிலை போராட்டம்
(7) பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் (எசனை,கடகால்) மாணவர்கள் சாலைமறியலை தொடங்கியுள்ளனர்.
(8) கும்பகோணம் பூம்புகார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
(9) பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி மாணவர்களும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Friday, March 8, 2013

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:
தமிழா-------------மியான்மர்.
சபா சந்தகன்-----மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா
கடாலன்------------ஸ்பெயின்
நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிக
திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து
கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும் கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன.
உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே

உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.

கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.

கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும்.

ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.

.இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.

உதாரணம்:
தமிழா-------------மியான்மர்.
சபா சந்தகன்-----மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா
கடாலன்------------ஸ்பெயின்
நான்மாடல் குமரி----------பசிபிக் கடல்
சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ
திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து
கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.

நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும் கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன.

Thursday, March 7, 2013

யானையின் தமிழ்ப்பெயர்கள்

 
 
வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் !

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கொம்பன்
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி

யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி