உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள்,, ஈழத்தின் மண் உயிர் நிலை பெற்றநாள்.
மேதகு தலைவனின் பிறந்தநாள் போற்றுவோம்
வீரியம் புகழ்பட ஆண்டுகள் நீண்டிடும்
ஈன்றவள் பார்வதி பாதம் பணிகிறோம்- திரை
மீண்டிடும் நாள்வரும் மாயைகள் விலகிடும்.
தோன்றிய இடரெலாம் தூசாய் மறைந்திடும்
ஐம்பத்து எட்டு ஆண்டுகள் தொடர்ந்திடும்.
தலைவனின் பிறப்பது உலகத்தின் அதிசயம்
சத்தியம் உண்மையில் அவர் ஒரு மெல்லினம்
நிறமதில் கறந்தபால் போன்றதோர் மனதிடை
நிமிர்ந்தவர் சினங்கொள்ள வைத்தது சிங்களம்.
தமிழனின் சிறுமையை கண்டவர் பொங்கினார்
தம்பியாய் சிரிப்பினில் நெஞ்சினில் தங்கினார்.
தமிழனின் உதிரத்தில் உணர்வின விதைத்தவர்.
தனியொரு ஒழுக்கத்தில் உலகத்தை வென்றவர்
ஒப்புக்கும் மழுப்பலாய் செப்பிட மறந்தவர்
ஒருகணம் பயத்தினை உணர்ந்திட ஒறுத்தவர்.
உறுதியில் அவர் ஒரு பெருமலை யென்பதும்
உண்மையில் எதிரியின் எரிமலை யல்லவோ
சீருடை அவர்க்கென பிறந்தது என்றனர்- வெள்ளையர்
தேசமும் அதனையே பகர்ந்தது திண்ணமாய்
வெள்ளையர் மற்றவர் விதந்தனர் புகழ்ந்தனர்
வீரனாய் உலகத்தில் ஒருவனே என்றனர்.
சிரம் தாழ ஒருபோதும் நடந்ததுமில்லை- அவர்
சிங்களன் மண்ணுக்காய் விதந்தாட வில்லை.
சாவொரு காலமும் நெருங்கிடா துண்மையே
தலைவனின் வழியொரு பிழைவரா திண்ணமே
காலமும் சதிகளும் குறு தடை போடலாம்
கடைநிலை சத்தியம் வெல்லுமே காணலாம்.
ஆயிரம் வரிப்புலி விதைநிலை உள்ளனர்
வானமே சிதறினும் வரிப்புலி வெல்லுவர்.
நிமிர்ந்தொரு நடையது பெரு முதலாக- தலைவனின்
நேர்கொண்ட கொள்கையே மந்திரமாக
வரமது போற்றிடும் தலைவனே வாழ்க- நீ
பிறந்தது தமிழனின் பெரும் பேறது வாக.
அலைகடல் தாண்டியும் நின்புகழ் மேவின
ஐம்பத்து எட் டாயிரம் வாழ்க!
கவிஞர் - கனகதரன்.
தோன்றிய இடரெலாம் தூசாய் மறைந்திடும்
ஐம்பத்து எட்டு ஆண்டுகள் தொடர்ந்திடும்.
தலைவனின் பிறப்பது உலகத்தின் அதிசயம்
சத்தியம் உண்மையில் அவர் ஒரு மெல்லினம்
நிறமதில் கறந்தபால் போன்றதோர் மனதிடை
நிமிர்ந்தவர் சினங்கொள்ள வைத்தது சிங்களம்.
தமிழனின் சிறுமையை கண்டவர் பொங்கினார்
தம்பியாய் சிரிப்பினில் நெஞ்சினில் தங்கினார்.
தமிழனின் உதிரத்தில் உணர்வின விதைத்தவர்.
தனியொரு ஒழுக்கத்தில் உலகத்தை வென்றவர்
ஒப்புக்கும் மழுப்பலாய் செப்பிட மறந்தவர்
ஒருகணம் பயத்தினை உணர்ந்திட ஒறுத்தவர்.
உறுதியில் அவர் ஒரு பெருமலை யென்பதும்
உண்மையில் எதிரியின் எரிமலை யல்லவோ
சீருடை அவர்க்கென பிறந்தது என்றனர்- வெள்ளையர்
தேசமும் அதனையே பகர்ந்தது திண்ணமாய்
வெள்ளையர் மற்றவர் விதந்தனர் புகழ்ந்தனர்
வீரனாய் உலகத்தில் ஒருவனே என்றனர்.
சிரம் தாழ ஒருபோதும் நடந்ததுமில்லை- அவர்
சிங்களன் மண்ணுக்காய் விதந்தாட வில்லை.
சாவொரு காலமும் நெருங்கிடா துண்மையே
தலைவனின் வழியொரு பிழைவரா திண்ணமே
காலமும் சதிகளும் குறு தடை போடலாம்
கடைநிலை சத்தியம் வெல்லுமே காணலாம்.
ஆயிரம் வரிப்புலி விதைநிலை உள்ளனர்
வானமே சிதறினும் வரிப்புலி வெல்லுவர்.
நிமிர்ந்தொரு நடையது பெரு முதலாக- தலைவனின்
நேர்கொண்ட கொள்கையே மந்திரமாக
வரமது போற்றிடும் தலைவனே வாழ்க- நீ
பிறந்தது தமிழனின் பெரும் பேறது வாக.
அலைகடல் தாண்டியும் நின்புகழ் மேவின
ஐம்பத்து எட் டாயிரம் வாழ்க!
கவிஞர் - கனகதரன்.
No comments:
Post a Comment