Saturday, February 16, 2013

vikathan owns it....

பெயர்ச்சி

மாமா இறந்த
சில தினங்களுக்குப் பிறகு
அக்கா வீட்டுக்குச்
சென்றிருந்தபோது
ஆழ்ந்த அமைதி
சூழ்ந்திருந்த வீட்டில்
பூவும் பொட்டும் இல்லாமல்
அக்கா அழுதுகொண்டிருக்க
பூ பொட்டோடு
மாமா சிரித்துக்கொண்டிருந்தார்
புகைப்படத்தில்!

No comments:

Post a Comment